இதுவும் எல்லோருக்கும் தெரிந்த ரொம்ப பிரபலமான விளையாட்டு. இது விளையாடும்போது ரொம்ப ஜாலியாக இருக்கும். கிரிக்கெட்டின் முன்னோடியான இதில் எதிர்த்து விளையாடுபவனுக்கு கொடுக்கப்படும் மூணு சான்ஸில் அவன் அடிக்காதபோது வரும் குதூகலம் ரொம்ப அருமையாக இருக்கும். அவன் அடிக்க ஆரம்பிக்கபோகும்போது ஒண்ணு காக்கா, இரண்டு குருவி, மூணு கொக்கு என்று சொல்லி அவனது கவனத்தை திசைதிருப்பும்போது அவனால் அடிக்கமுடியாதபோது ரொம்ப சந்தோசமாக இருக்கும்.
ஒருதடவை நான் எங்கத்தெரு பையன்கள்கூட குச்சிக்கம்பு விளையாடும்போது ஒருவன் விளையாடும்போது இதேபோல சொன்னதும் அவனால் அடிக்கமுடியாமல் போனதும் அவனுக்கு பயங்கர கோபம். அதன்பின் அவனிடம் டேய் இதெல்லாம் விளையாட்டுடா; அதுக்காக என்னிடம் பேசாம இருக்காதே என்று சொன்னேன்.
|