இவ்விளையாட்டை சிறுவர்களும் சிறுமிகளும் இணைந்தோ அல்லது தனித்தோ விளையாடுகின்றனர்.
'பூசணிக்காய் என்னும் விளையாட்டில் சிறுமியர் ஒருவர்பின் ஒருவராக அமர்ந்து கொள்வார்கள்.அவர்களுள் சிறிது வயது முதிர்ந்த ஒரு சிறுமி தோட்டக்காரியாகவும் மற்றொரு சிறுமி பூசணிக்காய் வாங்க வருபவராகவும் செயற்படுவர்.
பூசணிக்காய் வாங்க வரும் சிறுமி தோட்டக்காரியாக இருக்கும் சிறுமியை பார்த்து பூசணிக்கா இருக்கா ? என்று கேட்பால்.
தோட்டக்காரி 'இப்பதான் பூப்பூத்திருக்கு' என்பாள்.மறுபடியும் மற்றொரு ஆள் வந்து "பூசணிக்கா இருக்கா?" என்பாள் தோட்டக்காரி 'இல்லை இப்பதான் பிஞ்சு விட்டுருக்கு' என்பாள் இப்படியே ஒவ்வொருவராக வந்து கேட்க தோட்டக்காரி பூசணியின் வளர்ச்சிகளை ஒவ்வொன்றாக சொல்லுவால்.
இறுதியாக பூசணிக்காய் விற்பனைக்கு தயார் என்ற பருவத்துக்கு வரும் போது கேட்டு வரும் சிறுவர் சிறுமியிடம் தன் பின்னால் இருக்கும் குழந்தைகளை காண்பித்து உங்களுக்கு எந்த பூசணிக்கா வேண்டும் என்று தோட்டக்காரி கேட்பாள்.
அவர்கள் ஒருவரை காண்பித்து எனக்கு அந்த பூசணிக்கா வேண்டும் என்றவுடன் அந்த சிறுமியை நான்குபேர் பூசணிக்காயை தூக்குவது போல் தூக்கிக் கொண்டு போவார்கள்.பின்பு அந்த பூசணிக்காயை சமைத்து சாப்பிடுவது போல் நடிப்பர்.
இந்த விளையாட்டை பானை வாங்குவது விற்பதும் போலவும் விளையாடலாம்.
பூசணிக்காய் விற்றல்,பானை விற்றல் போன்ற விளையாட்டுகள் குழந்தைகளுக்கு தாவர வளர்ச்சியின் பருவத்தை அறிவுறுத்துவதாகவும் பொருட்கள் எவ்வாறு உருவாகிறது அவற்றின் தேவையும் அவசியத்தையும் புரியவைக்கிறது.இவ்வாறன விளையாட்டுகள் குழந்தைகளின் உடல்,மன வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன.அதோடி ஒன்றின் முழு வளர்ச்சிக்காகக் காத்திருக்க வேண்டும் என்ற அறநெறியையும் குழந்தைகள் மனங்களில் பதிய வைக்கிறது.
இவ்விளையாட்டை குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வது மட்டுமில்லாது மற்றவர்களோடும் பகிருங்கள்...
|