ந.செல்லம்மாள் ஜானகிராமன், ஃபார்மிங்டன் ஹில்ஸ், மிச்சிகன்.
புதிர் - 1
1.செய்திக்கும் உண்டு, சேலைக்கும் உண்டு. அது எது? 2.கற்காலப் போக்குவரத்து, இலக்கியத்திற்கும் தேவை. அது யாது? 3.பண்ணிலும் உண்டு, பெண்ணிலும் உண்டு. அது என்ன? 4.வினா மொழி. விடை மொழி. எந்த மொழி?
புதிர் - 2
1.உயிரில் நான்காவேன். மெய்யில் நானோருயிர்! நான் யாரோ? என்ன பேரோ? 2.வினையும் நானே வானொலியும் தானே! நான் எது? 3.இருவொரு மொழி கொண்டவள். ஐந்தோடொன்றாக. ஐக்கியமாவாள். விரைபவளுக்கு விரைவு வண்டியிலும் விலாசம் உண்டு! யார் அவள்? 4.தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து செய்த கலவை நான். இணைக்கும் பணியை செவ்வனே செய்வேன். நீரற்ற நிலத்திலும் கப்பலாவேன். நான் யார்? 5.உலகமே திரும்பிப் பார்க்கும். பேரழகி நான். அதிகாரமிக்கவர்களாலும் அதிகாரம் செலுத்த முடியாக் கார(ண)மானவள் வண்ணமயமான என் வாழ்க்கைப் பயணம் முழுவதும் முட்களுடனே! நான் யார்?
புதிர் - 3
1.ஒளிவேன், ஒளிர்வேன், ஒழியேன்! நான் யார்? 2.சிறையில் உணவு, சிந்தையின் உணர்வு. அது எது? 3.கூட்டிய ஒலியுடன், கூரிய ஆயுதமொன்று. அது என்ன? 4.வெண்பாவில் சேராப் பா(ல்) வகை! கரிய விலங்கின் கருணை மழை! அப்பால் எப்பால்? 5.ஒலி பரப்பும் பறவை! ஒளி பரப்பிய ஆங்கிலப் பெண்மணி. முழுப் பெயரில் மணம் பரப்புவார். யார் அந்தப் பெண் மலர்? 6.உருளையில் துளை, உயிர்மெய் கலந்தால் மெல்லிசை! என்ன அது?
தமிழோடு விளையாடு விடைகள்:
புதிர் - 1 தலைப்பு நடை சங்கதி/பல்லவி எம் மொழி? எம்மொழி (தமிழ்!)
புதிர் - 2 ஈ இடி வைகை ஒட்டகம் கடிகாரம்
புதிர் - 3 சூரியன் களி கத்தி எருமைப் பால் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மை புல்லாங்குழல்
|