இவ்விளையாட்டு சிறுவர் சிறுமியர் இணைந்து விளையாடும் விளையாட்டு
இது ஒரு உரையாடல் விளையாட்டும் போலவும் கேலி செய்து விளையாடும் விளையாட்டு போலவும் உள்ளது.முதலில் தலைமையான நபர் கேள்விகளை கேட்பார் மற்றவர்கள் வரிசையாக பதில் அளிக்க வேண்டும்.
உதரணமாக,
"உங்க வீட்டுலே என்ன கஞ்சி? அரிசி கஞ்சி என்ன அரிசி? அரக்கரிசி என்ன குழம்பு? மீன் குழம்பு என்ன மீன்? சாளை மீன் என்ன சாளை? நெய்ச்சாளை சாளை எங்க? சாப்புட்டாச்சி சாப்புட்ட சட்டி எங்க? உடைச்சாச்சு
'சாப்புட்ட சட்டி எங்க? ' என்பது ஒருவேலை கடைசி கேள்வியாக இருந்தால் உடைச்சாச்சு என்று பதில் சொன்னவர் தோற்றவராகிறார். இப்போது மற்றவர்கள் உடைச்சாச்சு என்று கத்திக் கொண்டே ஓட வேண்டும் தோற்றவர் துரத்தி பிடிக்கவேண்டும்.முதலில் தொடப்படுபவர்் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும். விளையாட்டு மறுபடியும் ஆரம்பிக்கும்
இப்போது கேள்விகளை புதிதாக கேட்க வேண்டும்
" எங்க போன? மரம் வெட்ட என்ன மரம்? பலாமாம் என்னப்பலா? வேர்ப்பலா என்ன வேர்? வெட்டி வேர் என்ன வெட்டி? மரம் வெட்டி என்ன மரம்? பனை மரம் என்ன பனை? தாளிப்பனை என்ன தாளி? விருந்தாளி என்ன விருந்து? மணவிருந்து என்ன மணம்? பூ மணம் என்ன பூ? மாப்பூ என்ன மா? அம்மா
இம்முறை என்ன மா? என்பதோடு கேள்வி முடிகிறது அம்மா சொன்னவர் தொடுபவராகிறார். மற்றவர்கள் கத்திக் கொண்டே ஓட அவர் தூரத்தி ஒருவரஒ தொடுகிறார்.மீண்டும் விளையாட்டு ஆரம்பிக்கிறது.
இவ்விளையாட்டில் குழந்தைகளின் கேள்வி கேட்கும் ஆற்றலையும் பதில் சொல்லும் ஆர்வத்தையும் வளர்கிறது. புதிது புதிதாக கேள்விகளையும் அதற்க்கு பொருத்தமான பதில்களையும் உருவாக்கும் திறன் பிறக்கிறது. இது தான் சார்ந்த சமூகத்தின் பயன்படு பொருட்களை அறியும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது.இவ்விளையாட்டின் மூலம் உடற்பயிற்சி,அறிவு செம்மைப்படுதல்,பொழுது பொக்கு மற்றும் வாழ்வியல் கருத்துகளும் கிடைக்கின்றன
|