|
||||||||
தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு அளித்தது..!! |
||||||||
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் காப்பாற்றக் கோரியும், மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் சட்ட பஞ்சாயத்து இயக்கம் பல்வேறு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக ஆளுநர் திரு.ரோசய்யாவை நேரில் சந்தித்த சட்ட பஞ்சாயத்து இயக்க நிர்வாகிகள், தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை தமிழக ஆளுநரிடம் வழங்கினர். ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கீழ்கண்ட கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன: 1. தமிழ்நாடு தகவல் ஆணையம் செயலிழந்து நிற்பதற்குக் காரணமானவரும், தகவல் உரிமைச் சட்டத்திற்கு எதிரானவரும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவருமான தலைமை தகவல் ஆணையர் K.S.ஸ்ரீபதி அவர்கள் நீக்கப்பட்டு, புதிய ஆணையர் நியமிக்கப்படவேண்டும். ( தகவல் உரிமைச் சட்ட பிரிவு 17ன் படி, ஆளுநரால் இந்த நடவடிக்கை எடுக்க இயலும். ( கேரளாவில் 2012ல் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைமை தகவல் ஆணையர் திரு.நடராஜன் அவர்கள் கேரள ஆளுநர் H.R.பரத்வாஜால் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது) 2. இந்தியாவின் 16 மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டிருக்கும் “சேவை பெறும் உரிமைச் சட்டம்” தமிழகத்திலும் அமல்படுத்தப்பட தமிழக அரசிற்கு பரிந்துரைக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையைக் கொண்டுவருவதுடன் இச்சட்டம் இலஞ்சத்தை பெருமளவில் குறைக்கும். 3. கேரளாவைப் பின்பற்றி தமிழகத்திலும் படிப்படியான நடவடிக்கைகள் மூலம் பூரணமதுவிலக்கை அமல்படுத்தவேண்டும். இது குறித்து தமிழக அரசிற்கு பரிந்துரைக்க வேண்டும். என சட்ட பஞ்சாயத்து இயக்கம் தங்களது மனுவில் கூறியுள்ளது. |
||||||||
by Swathi on 27 Aug 2014 0 Comments | ||||||||
Tags: சட்ட பஞ்சாயத்து இயக்கம் தமிழக ஆளுனர் Tamilnadu Governor Satta Panchayat Iyakkam | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|