|
||||||||
தமிழகத்தில் மது விலக்கு தொடர்பாக சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் கோரிக்கைக்கள் |
||||||||
மதுவினால் சீரழியும் குடும்பங்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கேரளாவைப் பின்பற்றி மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த உடனே தொடங்கி 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும். மதுவிலக்கை நோக்கிய முதற்கட்ட செயல்பாடாக, தமிழக அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை உடனே அமல்படுத்த சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோருகிறது. 1. இலக்கு வைத்து வருமானத்தைப் பெருக்காமல் மக்கள் நல்வாழ்வே முக்கியம் என்ற அடிப்படையில் புதிய மதுக்கடைகள் இனி திறக்கப்படாது என தமிழக அரசு கொள்கை அறிவிப்பு வெளியிடவேண்டும். 2. பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி மனு அளித்தாலோ, போராட்டம் நடத்தினாலோ, அக்கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். போராட்டத்தின் காரணமாக மூடப்படும் கடைகளை வேறு இடத்தில் திறக்கக் கூடாது. 3. தற்போது 12 மணிநேரமாக உள்ள மதுக்கடைகள் செயல்படும் நேரத்தை 6 மணி நேரமாகக் குறைக்க வேண்டும். 4. வாரக்கூலி பெறும் குடிநோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளுக்கு சனி, ஞாயிறு என 2 நாட்கள் விடுமுறை விடவேண்டும். அதேபோல், மாதத்தில் முதல் நாள், அரசு விடுமுறை நாட்களில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும். 5. குற்றச்செயல்கள் உருவாகும் இடமாக இருக்கும், குடிப்பகங்கள் (பார்கள்) உடனடியாக மூடப்படவேண்டும். 6. தமிழகமெங்கும் உள்ள குடிநோயாளிகள் மறுவாழ்வு பெறுவதற்கு ஒன்றித்திற்கு ஒரு மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட வேண்டும். மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வுப் பாடங்களை பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். 7. 21 வயதுக்கு கீழ் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட எவருக்கும் மது விற்பனை செய்யக்கூடாது என தற்போது உள்ள சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும். இளையதலைமுறையின் எதிர்காலத்தை கருத்தி கொண்டு இச்சட்டத்தை மீறுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். |
||||||||
by Swathi on 26 Aug 2014 0 Comments | ||||||||
Tags: Satta Panchayat Iyakkam SPI சட்ட பஞ்சாயத்து இயக்கம் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|