காத்திரு. தளர்வாக காத்திரு. படுத்திரு அல்லது உட்காந்திரு அல்லது நின்றுகொள் – எது உனக்கு நன்றாக இருக்கிறதோ அப்படி – அதற்காக காத்திரு. காத்திரு, கவனமாக இரு,
விரைவில் நீ அதன் கிசுகிசுப்பை கேட்பாய், உன்னை நெருங்கி வரும் ஏதோ ஒன்றின் அமைதியான காலடி ஓசையை கேட்பாய். விரைவில் உனது இதயத்தில், உனது இருப்பில் ஏதோ நுழைவதை உணர்வாய். உன்னால் அதை பார்க்கமுடியாது. ஆனால் அது அங்கிருக்கும். அது ஒரு மணம் போல உனது நாசியை நிறைக்கும். அது ஒளி போன்றது. உனது ஜன்னலை திறந்து வை. இதை
மட்டுமே நீ செய்ய வேண்டியது. ஜன்னலை திறந்து வைத்திருக்க வேண்டியது. அப்போது ஒளி எழும் போது மேகங்கள் இல்லாத போது சூரியன் உயரே எழும் போது ஒளிக்கதிர்கள் உன்னுள்
நுழையும்.
நன்றி : ஓசோ - தமிழ்
|