|
||||||||
இயல்பாக இரு |
||||||||
ஒரு குழந்தை நாள் முழுக்கக் கீழே விழுந்தாலும்,இயல்பாகவே எழுந்துவிடும். அது கீழே விழுந்ததைப்பற்றியே நினைக்காது. ஆனால்,அதைப்போல நீங்கள் விழுந்தால்,உங்களை மருத்துவ மனையில் தான் சந்திக்க வேண்டிவரும். ஏன்? ஒரு குழந்தை கீழே விழும்போது அது இயல்பாக விழுகிறது. விழுதலில் இருந்து சண்டை போட்டு தப்பிக்க நினைப்பதில்லை. அது அதன் போக்கிலேயே விழுகிறது.புவி ஈர்ப்புடன் போராடுவது இல்லை. ஒரு தலையணை எப்படி வெறுமே தரையில் விழுமோ,அப்படியே அது விழுகிறது. ஆனால்,நீங்கள் விழும்போது ஆரம்பத்திலேயே எதிர்க்கிறீர்கள். உங்களுடைய எல்லா தசைகளும்,ஏன்,உங்கள் எலும்புகள் கூட இறுக்கம் அடைகின்றன. இப்படி இறுக்கமான தசைகள்,நரம்புகள் மற்றும் எலும்புகள் கூட்டாக விழும்போது விரும்பத்தாகாத பல உடைவுகள் உங்கள் உடலிலஎற்படுகின்றன. அதேபோல,ஒரு குடிகாரன் கீழே விழும்போது பார்த்திருக்கிறீர்களா?அவன் எந்த விதப் போராட்டமும் இல்லாமல், முழுமையாக விழுவான். அவனுக்கும் ஒன்றும் ஆகியிருக்காது.முக்கியமாக,அவன் போராடும் மன நிலையில் இல்லை. இது தான் காரணம்.காலையில்,அவன் மிக இயல்பாக ,சாதாரணமாக எழுந்து நடப்பான். அவன் உடலில் உடைவோ வலியோ இருக்காது நன்றி : ஓசோ - தமிழ் |
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
Tags: ஓசோ சிந்தனைகள் இயல்பாக இரு Stay Normal Osho Quotes | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|