பதில்: அந்தப் பழமொழிக்குக் காலையில் தவறு செய்தால் மாலையில் துன்பம் வரும் என்பது நேரிடையான பொருள். செயலுக்குத் தானாகவே விளைவு வரும். அது உடனடியாகவும் இருக்கலாம், தாமதித்துப் பத்து வருடங்கள் கழித்தும் வரலாம். செயலுக்குத் தக்க விளைவு இருக்கிறது. செயலுக்கும் விளைவிற்கும் கால தூரம் என்று ஓர் கணக்கும் இருக்கிறது. அது அந்தந்தச் செயலைன் தன்மையை ஒட்டியும் ஏற்படும். மனிதனின் செயல் எந்த இடத்தில் இயற்கையினுடைய இயல்பான சட்டத்திற்கு முரண்படுகிறதோ, அந்த முரண்பாடே அங்கே துன்பமாகிறது. எந்தச் சிக்கலை எடுத்தாலும் சரி, எந்தத் துன்பத்தை எடுத்துக் கொண்டாலும் சரி, அது இயற்கையோடு கொண்ட முரண்பாட்டின் அடையாளம் தான். சாப்பிட்ட சாப்பாடு உடலில் ஜீரணம் ஆவதற்கு ஓர் ஒழுங்கமைப்பு இருக்கிறது. உணவில் அளவுமுறை இருக்கிறது. செரிமானம் ஆக காலம் வேண்டும். அதை மதிக்காமல் அதிகமாகச் சாப்பிட்டால் என்ன ஆகும்? அஜீரணம் வருகிறது: பேதி வருகிறது: அதனால் துன்பம் வருகிறது. இதையெல்லாம் உணரும் போது பழமொழியின் கருத்து சரிதான்.
வாழ்க வளமுடன்!! அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
|