ஒப்புடன் முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி உப்பிலாக் கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் முப்பழ மொடு பால் அன்னம் முகம் கடுத்து இடுவாராயின் கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே.
விளக்கம்: முழு மனத்தோடு, மலர்ந்த முகத்தோடு, உண்மையோடு பேசி அளவளாவி உப்பு இல்லாத கூழையே கொடுத்தாலும், அதைச் சாப்பிடுவது அமிழ்தத்தைச் சாப்பிடுவதற்கு நிகராகும். அவ்வாறு இல்லாமல், கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு மா, பலா, வாழை ஆகிய மூன்று விதப் பழங்கள், பால் இவற்றோடு சோற்றைக் கொடுத்தாலும் ஏற்கெனவே இருந்த பசி, மேலும் கடுமையான பசியைத்தான் ஏற்படுத்தும். எனவே விருந்தோம்பல் என்பதை முழுமனம், அன்பு, இன்சொல் ஆகியவற்றுடன் செய்து பயன்பெற்று, மகிழ்வடைவோம்.
|