தமிழர் பண்பாட்டு நடுவத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை விமான நிலையத்தில், பயணிகளுக்கு தமிழ் நாளேடுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை விமான நிலையத்தை தமிழ்படுத்தும் பொருட்டு, பல்வேறு கோரிக்கைகளை தமிழர் பண்பாட்டு நடுவம் சென்னை விமான நிலைய இயக்குனரிடம் முன்வைத்தது. இந்த கோரிக்கைகளை பரிசீலித்த சென்னை விமான நிலைய நிர்வாகம், தமிழக பயணிகள் வசதிக்காக பயணிகள் அனைவருக்கும் தமிழ் நாளேடுகள் கிடைக்கும்படி செய்தது. இதனால் பயணிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் ஆர்வமாக தமிழ் நாளேடுகளை எடுத்துச் செல்கின்றனர். தமிழ் நாளிதழ்கள் கிடைக்கும்படி செய்த சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு நம் வாழ்த்துகள்.
அதே போல் சென்னை விமான நிலையத்தின் உள்ளும் புறமும் இருக்கும் கடைகள் அனைத்தும் தமிழ்ப் பெயர் பலகையை தாங்கி நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை விமான நிலையம் ஏற்றுள்ளது. அதற்கான உத்தரவை இப்போது வணிகர்களிடம் பிறப்பித்து உள்ளது. மேலும் விமானத்தின் உள்ளே கொடுக்கப்படும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அறிவுப்புகளும் தமிழில் இருக்க வேண்டும், தமிழ் பேசும் விமான பணிப்பெண்களை கட்டாயம் வேலைக்கு அமர்த்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளையும் சென்னை விமான நிலைய நிர்வாகம் உடனடியாக நிறைவேற்றும் என தமிழர் பண்பாட்டு நடுவம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
|