ஏரி குளங்களில் உள்ள வண்டல் மண்ணை நாம் எடுத்துக்கொள்ளலாமா?
எடுத்துக்கொள்ளலாம். நமது பகுதியில் உள்ள ஏரி குளங்களில் உள்ள வண்டல் மண்ணை விவசாய தேவைகளுக்காகவும், வீட்டு உபயோகத்திற்காகவும் நாம் எடுத்துக்கொள்ளலாம்.
யாரிடம் முன் அனுமதி பெறவேண்டும்?
மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது இதற்காக அவரால் நியமிக்கப்பட்ட அலுவலரிடமோ முன் அனுமதி பெறவேண்டும்.
விவசாய நிலம் உள்ளவர்கள் மட்டும் தான் வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ள முடியுமா?
இல்லை. பொதுமக்களும் தங்கள் தேவைகளுக்காக வண்டல் மண்ணை எடுத்துக்கொள்ளலாம்
ஒருவர் தனது வீட்டுப் பயன்பாட்டிற்கோ அல்லது விவசாய பயன்பாட்டிற்கோ எவ்வளவு மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கு அளவீடு ஏதும் உள்ளதா?
உள்ளது. 30 கன மீட்டர் (தோராயமாக 10 யூனிட் லோடு) அளவிற்கு எடுத்துக்கொள்ளலாம்
இந்த அளவிற்கு வண்டல் மண்ணை எடுக்க அரசுக்கோ அல்லது வேறு எவருக்கோ கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?
இல்லை. எவ்வித கட்டணமும் யாருக்கும் செலுத்த தேவையில்லை. ஆனால் , மேற்குறிப்பிட்ட அளவிற்கு மேல் மண் எடுக்க வேண்டுமெனில் மாவட்ட நிர்வாகம் கூறும் தொகையினை செலுத்த வேண்டும்.
எந்தெந்த ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்கலாம்?
பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆகிய இவ்விரண்டு அரசுத் துறைகளின் பொறுப்பில் இருக்கும் ஏரி குளங்களில் நாம் வண்டல் மண் எடுக்கலாம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஏரி குளங்கள் மற்றும் இதர நீர்நிலைகள் இத்துறைகளின் பொறுப்பில் வரும். எனவே நமது பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான ஏரி மற்றும் குளங்களில் நாம் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம்.
இதற்கென உள்ள அரசாணை எண் என்ன?
அரசாணை நிலை எண் 233, தொழில்துறை (எம்.எம்.சி.2) நாள்: 23.09.2015
அரசாணையை இணையத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். www.tnmine.tn.nic.in/GO/G.O.MS.NO.233.pdf
நன்றி: திரு.ரமேஷ் கருப்பையா, தமிழ்க்காடு, தொழுதூர், கடலூர் மாவட்டம் 9444219993
ஏரி குளங்களில் தூர்வாரி நீர் பெருக்குவோம் ! நிலங்களில் வண்டல் மண் இட்டு, வளம் பெருக்குவோம் !!
|