|
||||||||
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? |
||||||||
கழிவநீர் கலப்பதால் ஆகாயத்தாமரை வளர்கிறது.இது ஒரு நாளைக்கு ஒரு செடி 1 லிட்டர் நீரை ஆவியாக்குகிறது எனில் நீர்நிலைகளிலிருந்து எவ்வளவு நீர் ஆவியாகும் என பாருங்கள்.
இதை கட்டுப்படுத்த இரண்டு மூன்று தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். மனிதர்கள் மூலம் அல்லது இயந்திரங்கள் மூலம் தாமரையை நீரிலிருந்து அகற்றுவது வழக்கம். அதே நேரத்தில் AG11 எனும் அங்கக திரவத்தை தாமரையின் மீது தெளித்தால் 10-15 நாட்களில் செடிகள் காய்ந்துவிடும். அதன்பிறகு அதை எடுப்பது எளிது.
நீரிலிருந்து வெளியே எடுத்த தாமரைச்செடிகளின் தண்டு பகுதிகள் பச்சையாக இருக்கும். அதன்மீது மீண்டும் ஒருமுறை AG11. திரவம் தெளித்து காய வைக்க வேண்டும். பிறகு அவைகளை திட்டு திட்டாக அடுக்கி வைத்து மண்புழுக்களை விட்டு மண்புழு உரமாக மாற்ற வேண்டும். அது பேரூட்டச்சத்துக்கள் நுண்ணூட்ட சத்துக்கள் நிறைந்த உரமாக மாறும்.
பிறகு அந்த நீர்நிலைகளில் நுவால்கி நுண்ணூட்ட திரவத்தை தெளித்தால் ஆகாயத்தாமரைச் செடிகள் வளராது. மாறாக டை ஆட்டம் (Diatom) எனும் கண்ணுக்கு தெரியா பாசிகளை வளர்க்கும். அது மீனுக்கு உணவாகும்.
நீர்நிலைகளில் எவ்வளவு கழிவுநீர் உள்ளே வந்தாலும் வருடத்திற்கு நான்கு முறை நுவால்கி திரவத்தை தெளித்தால் நீர்நிலைகளில் தாமரை வளராது. நீர்நிலைகளும் சுத்த மாக்கப்படும். இந்த முறையை உதகை ஏரியில் கடைப்பிடித்தோம். கரைந்துள்ள உயிர்காற்று 50 அடி ஆழத்தில் (Dissolved Oxygen ) லிட்டருக்கு 1-மிகி லிருந்து 5 மி கி என உயர்ந்தது. மிக எளிமையான செலவு குறைந்த தொழில் நுட்பம்.
தேவைப்படுவோர் தொடர்பு கொள்க. நன்றி..
முனைவர் இரா. இளங்கோவன்
9443330394 7904519849
. பசுமை வணக்கம்
|
||||||||
by Swathi on 03 Apr 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|