|
||||||||
தீப ஒளியால் விளைந்த நன்மை !! |
||||||||
இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளியன்று எமதர்மனை வழிபடுவதை பெண்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கான காரணம் சுவாரசியமானது. முன்னொரு காலத்தில் வட இந்திய பகுதியை ஹிமா என்ற பேரரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனது 16 வயது மகன், திருமணம் முடிந்த நான்காவது நாள் பாம்பு தீண்டி இறந்து விடுவான் என்று ஜோதிடர்கள் கணித்திருந்தனர். இதனால் மன்னன் பயந்து போனான். இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு மகனுக்கு மணமுடித்து வைத்தான். மன்னனின் மகனை மணந்து கொண்ட இளம் பெண்ணின் பெயர் சாவித்திரி. புத்திசாலியான சாவித்திரி, கணவனை எமதர்மனின் பாசக்கயிற்றில் சிக்கவிடமாட்டேன் என்று உறுதி பூண்டாள். ஜோதிடர்கள் குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. அன்று இரவு, கணவனை தூங்க சாவித்திரி அனுமதிக்கவில்லை. கணவனுடன் அவள் இருந்த அறையின் வாயிலில் தகதகக்கும் தங்க, வெள்ளி ஆபரணங்களை கொட்டி வைத்தாள். இரவை பகலாக்கும் வகையில் விளக்குகளை எரியவிட்டாள். குறிப்பாக படுக்கையை சுற்றி அதிக பிரகாசம் கொண்ட விளக்குகளை ஏற்றி வைத்தாள். அதன் பிறகு தனது இனிய குரலால் பாடத் தொடங்கினாள். கணவன் தூங்காதிருக்க, அவ்வப்போது கதைகளையும் கூறிக்கொண்டிருந்தாள். எமதர்மன் அனுப்பி வைத்த பாம்பு அறைக்கு வெளியே வந்தது. ஜொலி, ஜொலிக்கும் ஆபரணங்களின் வெளிச்சமும், விளக்குகளின் பிரகாசமும் அதன் கண்களை கூசச் செய்தன. தங்க ஆபரணங்களின் மீது தள்ளாடியவாறு ஊர்ந்து சென்ற பாம்பினால் சாவித்திரியின் கணவன் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் போனது. சோர்ந்து போய் படுத்த விட்ட பாம்பு, பொழுது விடிந்ததும் வந்த வழியாக திரும்பி சென்று விட்டது. இதனால் இளவரசன், சாவின் பிடியில் இருந்து தப்பினான். இதன் காரணமாக இந்தியாவின் சில பகுதிகளில் தீபாவளி, எமதீப தினம் என்று அழைக்கப்படுகிறது. அன்று இரவு அப்பகுதிகளில் விளக்குகள் விடியும் வரை தொடர்ச்சியாக எரிந்து கொண்டிக்கும். கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காக, பெண்கள் தீபாவளியை எமதர்மனை நினைத்து வழிபடும் நாளாக கொண்டாடுகின்றனர். இது போன்ற சுவராசியமான கதைகள் தீபாவளிக்கு மேலும் மெருகூட்டுகின்றன. |
||||||||
by Swathi on 21 Oct 2014 0 Comments | ||||||||
Tags: சாவித்திரி எமதர்மன் தீபாவளி வரலாறு Diwali Diwali History Yamadharma | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|