(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
தைரிய காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட சோர்விலாத மனத்தையும், இனிமையான பேச்சையும், கேட்பவர்களுக்கு மறுக்காது கொடுப்பவருமான விருச்சிக இராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.
விருச்சிக இராசிக்கு தன, புத்திர பாவாதிபதியான குரு ஆவணி 27 க்குப் பிறகு விரயபாவத்தில் சஞ்சரிக்கிறார். அதன் காரணமாக பிற்பகுதியில் அரசு விரோதம், சுப அசுப விரயங்கள் ஏற்படும். பிறர் வாங்கிய கடனுக்கு பிணை ஏற்கக் கூடாது. சுலபமான காரியத்தையும் கடின உழைப்புக்குப் பிறகே முடிக்க முடியும். எவ்வளவு பொருள் வரவுகள் இருந்தாலும் வரவுக்கு மிஞ்சியதாகவே செலவுகள் இருக்கும். வீடு அல்லது கட்டிட சம்பந்தமான செலவுகள் ஏற்படும். சிலருக்கு, வீட்டில் மராமத்து பணிகள செய்ய வேண்டிய நிலை ஏற்படும். தொலை தூரப் பயணங்கள் மூலமான செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தேவையற்ற கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். மூத்த சகோதர்ர்களுக்குப் பல வழிகளிலும் நல்ல வருமானம் இருக்கும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும். சிலருக்குப் பெண்களால் அவமானங்கள் ஏற்படலாம். மனதில் தயக்கமும், அச்ச உணர்வும் இருக்கும். உழைப்பினால் எந்தவிதப் பயனும் இருக்காது. வேளாவளைக்கு வாய்க்கு ருசியான உணவு கிடைக்காது. மனைவிக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். பிறருக்குப் பிணையாகக் கையெழுத்துப் போட்டு வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். கடன் வாங்கிக் கடல் வாணிபம் செய்தாலும் நஷ்டங்கள் ஏற்படும். அரசுடன் தேவையற்ற பகை உண்டாகும். சுப விரயமும், அசுப விரயமும் மாறிமாறி ஏற்படும். கௌரவ பங்கத்தால் மன உளைச்சல் ஏற்பட்டு, மன அமைதியும் குறையும். எந்தக் காரியத்தை எடுத்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டு தோல்வி அடைய நேரும். எவ்வளவு பெரிய செல்வந்தராக இருந்தாலும் கைபணம் சமயத்தில் உதவாது. வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படும். ‘வன்மை யுற்றிட இராவணன் முடி பன்னிரெண்டினில் வீழ்ந்ததும்’ என்ற பழம் பாடலுக்கு ஏற்ப பதவி இழக்க நேரும். வேலைமாற்றங்கள் ஏற்படலாம்.
குரு 5 ஆம் பார்வையாக சுக பாவத்தைப் பார்வையிடுகிறார். அதன் காரணமாக வீடு, மனை வாங்கவோ, கட்டவோ நல்ல யோகம் ஏற்படும். புதிய பாடப் பிரிவுகளை கற்கும் வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இளைய சகோதரர்களுக்கு தனவருமானம் அதிகரிக்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தாயாரின் மதிப்பும், மரியாதையும் கூடும். தந்தையால் நடத்தப்படும் வழக்குகள் வெற்றி அடையும். தாயார், வீடு, சுகம் போன்ற 4 ஆம் வீட்டுத் தொடர்பான விஷயங்கள் முன்னேற்றம் இருந்தாலும், பணவிரயங்கள் ஏற்படும். விவசாயத் தொழிலில் இலாபம் ஏற்படும்.
குரு 7 ஆம் பார்வையாக 6 ஆம் பாவத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக எதிரிகள் மறைவர். எதிர்ப்புகள் விலகும். சத்ரு ஜெயம் ஏற்படும். வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். நோய் பாதிப்புகளின் தாக்கமும், வேகமும் குறையும். ஆயினும், மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். கடன் கொடுத்தவர்கள் தொல்லை கொடுப்பதோடு அவமானப்படுத்தவும் செய்பவர்கள். சிலருக்கு, அடிக்கடி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் மூலமாக தனவருமானங்கள் வரும். மனைவி மூலமான விரயச்செலவுகள் தவிர்க்க முடியாததாகும். தந்தையின் தொழில்கள் மேம்படும். தாய் தொட்டதெல்லாம் துலங்கும். வெற்றியும் ஆடையும்.
குரு 9 ஆம் பார்வையாக 8 ஆம் இடத்தைப் பார்வை செய்கிறார். அதன் காரணமாக வம்பு வழக்குகள் குறையும், மனைவி மூலமான வருமானங்கள் அதிகரிக்கும். தந்தையால் செலவுகள் அதிகரிக்கும். தெய்வீகப் பயணங்களால் பசவிரயங்கள் கூடும். கோர்ட் கேஸுகள் வெற்றி அடையும். கைவிட்டுப் போன பொருட்கள் வந்து சேரும். விபத்துக்களில் இருந்து பெரிய பாதிப்புகள் ஏதுமின்றி தப்பித்து விடுவீர்கள். பெண்களுக்குத் தடைப்பட்ட திருமண வைபவங்கள் மீண்டும் நடைபெறும். வட்டி யில்லா கடன் உதவிகள் கிடைக்கும். பிறரின் பணங்கள் கைவந்து சேரும். இன்ஷியூரன்ஸ், லாட்டரி, பந்தயங்கள், போட்டிகள் மூலமாக எதிர்பாராத தனவரவுகள் ஏற்படும், புதிதாக வாகனம் ஓட்டுபவர்கள் கவனமாக, நிதானமாக ஓட்டிப் பழகவேண்டும்.
விருச்சிக இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி தாமிர மூர்த்தியாக மூன்றாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு செம்பாலான பாத்திரங்கள் சேர்க்கை உண்டாகி ஓரளவு நன்மை அளிக்கும். செப்பு பாத்திரங்களை ஆலயங்களுக்குக் காணிக்கையாக செலுத்துவது நல்லது.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
வேலையில் எப்பொழுதும் கவனம் தேவை. புதிய வேலையை உறுதி செய்தபின் பழைய வேலையை விடுதல் வேண்டும். கிடைத்த வேலையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். எதிலும் நிதானம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடமும் சற்று கவனமுடன் பழகுதல் வேண்டும். வெளிநாடு வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். அரசு மற்றும் தனியார் துறையில் எதில் முதலில் வேலை வந்தாலும் ஒப்புக் கொள்ளல் வேண்டும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு இருந்தாலும் ஒரு சில பிரச்சனைகளும் ஏற்படும்.
தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)
சுயதொழில் மற்றும் கூட்டுத் தொழில் புரிபவர்கள் ஓரளவு நற்பலன் அடைவர் ஏற்றுமதி இறக்குமதி ஓரளவு பரவாயில்லாமல் அமையும். பங்குச்சந்தை ஓரளவு லாபகரமாக இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகள் சேவைத்துறைகள் லாபகரமாக அமையும். தகவல் தொடர்பு, போக்குவரத்து, செய்தி, பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, ஏஜென்ஸி, கன்சல்டன்ஸி, துறைகள் ஏற்றமானதாக இருக்கும். விஞ்ஞானம் கெமிக்கல் சற்று சுமாராக இருக்கும். ஆடை, ஆபரண, விளையாட்டுச் சாமான்கள், பிளாஸ்டிக், மருந்து சார்ந்த துறைகள் சற்று சுமாராகவே இருக்கும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ், பொறியியல், ரியல் எஸ்டேட் நல்ல லாபகரமாகவே இருக்கும். இரும்பு, எஃகு, கனிமவளங்கள் துறை லாபகரமாக இருக்கும். ரோட்டோர வியாபரிகள் ஓரளவு நல்ல லாபம் அடைவர்.
விவசாயம்
விவசாயம் எதிர்பார்த்த வருமானத்தை ஓரளவு தரும். லாபம் அதிகரிக்கும். புதிய நிலங்கள், புதிய தோட்டங்கள் பண்ணைகள் ஒரு சிலர் வாங்க வாய்ப்பு ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் அமையும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். அரசால் ஆதாயம் ஏற்படும்.
அரசியல்
எதிர்பார்த்த பெயரும் புகழும் அமையும். அரசால் நற்பலன்கள் அமையும். எதிர்பாராத தனவரவுகள் அமையும். தொண்டர்களின் அன்பும் அரவணைப்பும் கிட்டும். அரசியல் மகிழ்ச்சிகரமாக அமையும். வழக்குகள் அதிகப்படியான கவலைகள் உண்டுபண்ணும்.
கலைஞர்கள்
இசை, ஓவியம், சினிமா, டி.வி. போன்ற கலைத்துறையில் இருப்பவர்கள் ஓரளவு பெயர், புகழ், பணம் சம்பாதிக்க வாய்ப்பு அமையும். ஜோதிடம் மற்றும் மற்ற கலைத்துறைகள் லாபகரமாக இருக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் புதிய ஊதிய உயர்வும் அமையும்.
மாணவர்கள்
ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில வாய்ப்பு அமையும். எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைத்து படிக்க சந்தர்ப்பங்கள் அமையும். கடன் வாங்கி படிக்கவும் ஒரு சிலருக்கு வெளிநாட்டில் படிக்கவும் வாய்ப்புகள் அமையும்.
பெண்கள்
இல்லத்தரசிகளின் ஆசைகளும் அபிலாஷைகளும் பூர்த்தியாகும். இதுகாறும் நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியம் நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு 2வது திருமணத்திற்கும் வழிவகுக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் பிரச்சனைகள் இருந்தாலும் வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் அமையும். உடன் பணிபுரிபவர்கள் நல்ல ஒத்துழைப்பு நல்குவர். உயர் அதிகாரிகளால் தேவையற்ற மனவருத்தங்கள் ஏற்படும். எனவே எச்சரிக்கை தேவை. நரம்பு சம்பந்தமான மற்றும் சளித்தொல்லைகள் வர வாய்ப்புள்ளதால் உடல்நலத்தில் கவனம் தேவை. மேலும் தலை, கால், மற்றும் அடிவயிற்றில் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.
உடல் ஆரோக்யம்
அறுவை சிகிச்சைக்கான காலமிது, தலை, அடிவயிறு கால் போன்ற உறுப்புகளில் பிரச்சனைகள் ஏற்படும். உடலில் உப்பு, சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும். உணவுப் பழக்க வழக்கங்களில் கட்டுப்பாடுகள் அவசியம்.
விருச்சிகத்திற்கு - தாமிர மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் பெரும்பாலும் குறையும்.(12) 60%
|