"மனிதர்களுக்கு மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது மேலான இலட்சியத்திற்காக வாழ்ந்து இறந்து போவதே சிறந்தது" என்று கம்பீரமாக முழங்கிய வீரத்துறவி விவேகானந்தர், சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (செப். 11, 1893).
”லேடிஸ் & ஜென்ட்ல்மென்!” என்றே மக்கள் கூட்டத்தை அழைத்துப் பழகிப்போயிருந்த அமெரிக்கர்களைப் பார்த்து,” அமெரிக்கச் சகோதரிகளே! சகோதரர்களே!” என்று விவேகானந்தர் விளித்தது, புதியதோர் சிலிர்ப்பை அவர்களுக்குள் ஏற்படுத்தியதையும் அதன்விளைவாய்ச் சில மணித்துளிகள் வரை அவர்கள் தொடர்ந்து கரவொலி எழுப்பி விவேகானந்தரிடம் தம் பரவசத்தைப் புலப்படுத்தியதையும் அறியும்போது அதே சிலிர்ப்பை நாமும் உணரமுடிகின்றது!
”யாதும் ஊரே; யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனின் மணிமொழிகளை முதன்முதலில் அந்நிய மண்ணில் உரக்கச் சொல்லி நம் மண்ணின் மாண்பை உலக அரங்கில் உயர்த்திய அந்த வீரத்துறவியை நினைவுகூர்ந்து போற்றுவோம்!
-மேகலா இராமமூர்த்தி
|