டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது அதிருப்தியடைந்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ., வினோத்குமார் பின்னி, உண்ணாவிரதம் இருக்கப்போவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், கேஜ்ரிவால் பதவி வெறியில் உள்ளார்.ஆம் ஆத்மியிலிருந்து விலகும் எண்ணமில்லை. வேறு கட்சியில் சேர மாட்டேன். கெஜ்ரிவாலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளேன். புகாரில் சிக்கியுள்ள சட்ட அமைச்சர் சோம்நாத் பார்தி பதவி விலக வேண்டும். தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளிலிருந்துஆம்ஆத்மி விலகிச் செல்கிறது. மக்களின் உணர்வுகளுடன் கட்சி முரண்படுகிறது என கூறினார்.
|