விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள கோட்டக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் திருநங்கை கல்கி. இவர் 'நர்த்தகி' என்ற தமிழ்ப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 'சகோதரி' என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். தான் மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப் பட்டால் சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன் என்றும், விழுப்புரத்தை தொழில் வளர்ச்சி பெற்ற நகரமாக பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் சிறப்பு பிரதிநிதியாக அமெரிக்காவுக்கு சென்று திரும்பினார். இவர் மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் எம்.ஏ. முதுகலை பட்டமும், சிதம்பரம் பல்கலைகழகத்தில் சர்வதேச உறவுகள் கல்வியில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.சமூக சேவையில் கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறார்.
|