|
||||||||
சென்னைக்கு இருக்கும் தனிச்சிறப்பு |
||||||||
சென்னைக்கு இருக்கும் தனிச்சிறப்பு தமிழகத்தில் எந்த ஒரு நகரத்திற்கும் இல்லாத ஒரு இயற்கை அமைப்பு சென்னைக்கு உண்டு. அது வங்கக்கடல் தான். எவ்வளவு நீர் பொழிந்தாலும் கடலுக்கு உடனே சென்றுவிடும். தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைத் தேக்கி வைக்கும் முறை தமிழக வரலாற்றில் பழமையான ஒன்று. இத்தகைய நீர்நிலைகளைக் குளம், இலஞ்சி, பொய்கை, ஏரி, வாவி, கூவல், குழி எனப் பல்வேறு பெயர்களில் பண்டைத் தமிழர்கள் அழைத்துள்ளனர். நகரமயமாக்கலுக்கு இரையான ஏரிகள்: கிணறு வெட்டுதல் தொடர்பான நூலுக்குக் கூட ‘கூவ நூல்’ என்று தான் பெயர். கூவம் என்ற சொல்லுக்கு ‘தூய ஊற்று நீர்’ என்றே பொருள். குயில் கூவுது என்பது இனிமை சார்ந்த செயல். எப்போதும் பெய்யும் மழை தான் சென்னையில் இப்போதும் பெய்கிறது. ஆனால் வெள்ளம் சூழ்கிறது என்கிறோம். ஏனென்றால் வெள்ளத்தைத் தாங்கி நின்ற ஏரி, தாங்கல் அனைத்தும் நகரமயத்திற்கு இரையாகிவிட்டது. சென்னையில் நகரமயத்திற்கு இரையான ஏரிகள்…. 1. நுங்கம்பாக்கம் ஏரி 2. தேனாம்பேட்டை ஏரி 3. வியாசர்பாடி ஏரி 4. முகப்பேர் ஏரி 5. திருவேற்காடு ஏரி 6. ஓட்டேரி 7. மேடவாக்கம் ஏரி 8. பள்ளிக்கரணை ஏரி 9. போரூர் ஏரி 10. ஆவடி ஏரி 11. கொளத்தூர் ஏரி 12. இரட்டை ஏரி 13. வேளச்சேரி ஏரி 14. பெரும்பாக்கம் ஏரி 15. பெருங்களத்தூர் ஏரி (இதன் பழைய பெயர் பெருங்குளத்தூர்) 16. கல்லு குட்டை ஏரி 17. வில்லிவாக்கம் ஏரி 18. பாடிய நல்லூர் ஏரி 19. வேம்பாக்கம் ஏரி 20. பிச்சாட்டூர் ஏரி 21. திருநின்றவு+ர் ஏரி 22. பாக்கம் ஏரி 23. விச்சூர் ஏரி 24. முடிச்சூர் ஏரி 25. சேத்துப்பாடு ஏரி 26. செம்பாக்கம் ஏரி 27. சிட்லபாக்கம் ஏரி 28. மாம்பலம் ஏரி 29. கோடம்பாக்கம் பேங்க் ஏரி 30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம் 31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம் 32. வேளச்சேரி 33. செம்மஞ் ஏரி 34. ரெட் ஏரி 35. பொத் ஏரி 36. கூடுவாஞ் ஏரி 37. அடை ‘ஆறு’ (அடர்ந்த ஆறு) 38. அணை காபுத்தூர் 39. பள்ளிக்கர அணை 40. காட்டாங் குளத்தூர் அதனால்தான் ஏரி, குளம், ஆறு, அணையில் தண்ணீர் நிற்கிறது. அதோடு தண்ணீரைத் தாங்கி நின்ற ஈக்காட்டுதாங்கலும் உண்டு. கடலுக்குச் செல்ல வேண்டிய வழியை உருவாக்கிய நீர்: நகரமயமாக்கல் நடைபெற்றாலும் நீர் கடலுக்குச் செல்லக்கூடிய வழியை உருவாக்கியிருக்க வேண்டும். அது அரசும் மக்களும் இணைந்து செய்ய வேண்டிய ஏற்பாடு. அதைச் செய்யத் தவறியதால் வருடம் தோறும் இன்னல்தான். இப்போதும் திட்டமிட்டால் எளிமையாகச் செய்து முடிக்கலாம். |
||||||||
by Lakshmi G on 27 Nov 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|