சேர்வை என்ற இசைக்கருவியை அடித்து ஆடும் ஆட்டம் சேர்வையாட்டம் எனப்படும். குரும்பர்கள் நிகழ்த்தும் இக்கலை குரும்பக் கூத்து, குரும்பராட்டம், சேர்வைக்கூத்து என்றும் அழைக்கப்படும். இக்கலையானது மலைவாழ் மக்களில் ஒரு பகுதியினரான குரும்பர்கள் என்ற சாதியினருக்கு உரியதாகும். குரும்பர்கள் திருச்சி, சேலம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலும். புதுக்கோட்டை மாவட்டத்தில் புத்தாம்பூர், குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களிலும் வாழ்கின்றனர். இவ்வூர்களின் கோவில்களில் நடைபெறும் பெரிய, சிறிய விழாக்களில் இவ்வாட்டம் இடம்பெறும். பேயோட்டும் நிகழ்ச்சிக்கு சேர்வை இசைக்கருவி முக்கியமாகத் தேவைப்படுகிறது. இக்கலையில் ஆண்கள் மட்டுமே பங்கு பெறுவர். இவர்களுக்கென்று வயது வரம்பு எதுவும் இல்லை.
|