கான்கிரீட் கட்டுமானங்கள் மட்டுமே, அதிக காலம் நிலைத்திருக்கும் என்பதால், கான்கிரீட் கட்டுமானப் பணிகளை மேற்க்கொள்கின்றனர். இதிலும் விரிசல், அரிப்பு பிரச்னைகளை தவிர்க்க முடியாது.
கான்கிரீட் கட்டுமானங்கள் வலுவிழக்க, பல காரணங்கள் உள்ளன. காற்றில் உள்ள கரியமில வாயு, குளோரைடு போன்றவை கான்கிரீட்டை பாதிக்கும். தண்ணீர், மணலில் கலந்திருக்கும் கந்தக உப்புகள், காரங்களாக செயல்பட்டு, மணலில் உள்ள சிலிக்காவுடன் வினைபுரிவதால், கான்கிரீட்டை வலுவிழக்க செய்யும் என்கின்றனர், கட்டுமான வல்லுனர்கள்.
கடலோரப் பகுதி கட்டுமானங்கள், எளிதில் பாதிப்புக்கு ஆளாகின்றன. கட்டடத்தில் சேதம் ஏற்பட்டால், ஏன், எதற்காக என்று ஆராயாமல், எந்த முடிவுக்கும் வரக்கூடாது. சுவரில் ஒரு இடத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தால், அதிகரிக்காமல் தடுக்க வேண்டும். இதன் பின் உண்மையான காரணத்தை கண்டறிந்து, சரிசெய்ய வேண்டும்.
விரிசல் மேலோட்டமாக இருந்தால், மேற்புற காரையை கொத்தி எடுத்துவிட்டு, தேவை அடிப்படையில் சில வகை ரசாயனங்களை சேர்த்து, புதிய பூச்சு வேலையை மேற்கொள்ளலாம். வெளிப்புற விரிசல், உட்புறத்தில் இருந்து ஏற்பட்டிருந்தால், சீரைமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர், கட்டுமான வல்லுனர்கள்.
|