களரி என்பது பழமையான வீரவிளையாட்டாகும். இதனை அடிமுறை என்றும் கூறுவதுண்டு. இக்கலையானது கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்காலம் முதல் இருந்து வருகிறது. ஆயுதமின்றி உடம்பின் குறிப்பிட்ட பகுதியைத் தட்டிச் செயலிழக்கச் செய்வதோடு, வாள், கத்தி, சுருள்வாள், மான்கொம்பு, கண்ட கோடாலி, மழு போன்ற ஆயுதங்களையும் இக்கலையில் பயன்படுத்துவதுண்டு. வடக்கன் களரி, தெக்கன் களரி என இரு வகைப்படுகிறது. பண்டைய காலங்களில் களரி வீரர்களின் உதவியால் தன் நாட்டின் பகைவர்களை அழித்துள்ளதாகவும், சேர மன்னன் மார்த்தாண்ட வர்மாவின் நண்பனாகத் திகழ்ந்த அனந்தன் என்பவரது முயற்சியால் களரி இயக்கம் பெற்றதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. களரிக்கும் கராத்தே, குங்பூ சண்டைக்கும் தொடர்பு உண்டு என்று கூறப்படுகிறது. ஜப்பானிய குங்பூவின் பல சுவடுகள் களரியில் இருப்பதாக கருத்துகள் நிலவுகிறது.
|