|
||||||||
அதிகரித்து வரும் விவாகரத்துகள் !! தவிர்ப்பது எப்படி !! |
||||||||
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பது நம் முன்னோர்களின் கூற்று. இந்த கூற்றை கடைசி வரைக்கும் காப்பற்றுவதற்கு ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் முக்கிய பொறுப்பு உண்டு. பெற்றோரும், சொந்தங்களும் புடை சூழ நடைபெற்ற திருமணங்களும் அல்லது நண்பர்கள் புடை சூழ நடைபெற்ற காதல் திருமணங்களில் கூட கணவன், மனைவிக்கு இடையே புரிதலும், அனுசரனையும், விட்டு கொடுத்தலும் இல்லாத காரணத்தால் நீதிமன்றம் வாயிலில் நிற்கின்றனர். பிரச்னையை மனம் விட்டு பேசுங்கள் : பிரச்சனை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், முதலில் கோபப்படமாலும், பதட்டப்படாமலும் கணவன், மனைவி ஒன்றாக இருந்து, சமாளிக்க வேண்டும். அப்படி செய்யாமல், இந்த பிரச்னைக்கு நீதான் காரணம், இல்லை நீதான் காரணம் என்று மோதிக் கொண்டால் பிரச்சினை இன்னும் பெரிதாகுமே தவிர பிரச்சினை தீராது. எனவே பிரச்சினைகளை ஆரம்பத்திலயே இருவரும் மனம் விட்டு பேசி தீர்த்தால் இல்லறம் என்றும் சந்தோஷம்தான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுங்கள் : இன்றைய காலக்கட்டத்தில் விட்டுகொடுத்து போவது என்பது இல்லை, இதனாலேயே பல தம்பதிகள் விவாகரத்து கேட்கின்றனர். விட்டு கொடுங்கள், ஒருவர் கோபமாக இருக்கும் போது மற்றொருவர் அமைதியாக இருங்கள், அச்சமயம் வார்த்தைகள் நீள்வதும் குறையும், பிரச்சினையும் குறையும். இதற்கு மாறாக இருவரும் ஒரே சமயம் கோபப்பட்டால் அது வளர்ந்து விவாகரத்து வரைக்கும் போகும். அன்பு – அரவணைப்பு : ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லுங்கள். கணவன் மனைவி இருவரில் யார் தவறு செய்தாலும் அதை ஒத்துக் கொள்ளுங்கள், அதற்காக மன்னிப்பும் கேளுங்கள். நடந்த தவறுகளை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டாதீர்கள். அன்புடன் விமர்சியுங்கள் மற்றும் மேலும் சில ரொமான்ஸ்களை செய்யுங்கள். குடும்ப சந்தோஷம் நீடிக்க அன்பு, அரவணைப்பு, விட்டுக் கொடுத்தல், மனம் விட்டு பேசுதல் இவற்றை பின்பற்றி பாருங்கள். மண வாழ்க்கை என்றும் மகிழ்ச்சியோடு இருக்கும்... |
||||||||
by Swathi on 24 May 2014 0 Comments | ||||||||
Tags: விவாகரத்து Avoid Divorce Divorce Vivagarathu | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|