|
||||||||
முழுவதுமாக இரு, மூழ்கி விடாதே... |
||||||||
எந்த செயலிலும் அல்லது செயலற்ற தன்மையிலும் முழுவதுமாக இரு. மூழ்கிவிடாதே. இவை இரண்டும் மிகவும் வித்தியாசமானது. வேலையை முழுவதுமாக செய்பவன் அதை அனுபவிப்பான். கொண்டாடுவான். ஆனால் வேலையில் மூழ்கிவிடுபவனை வேலையே அனுபவிக்கும், அதுவே கொண்டாடும், ஆனால் அவன் விரக்தியில் இருப்பான். இங்கே முழுமை என்பது மிக சரி (perfection)என்று அர்த்தமல்ல. யாராலும் எதையும் மிகச்சரியாக செய்ய முடியாது. முயற்சி செய்து பார். அது மேலும் பல பிரச்சினைகளேயே கொண்டு வரும். எங்கே இருக்கிறாய் என்பது முக்கியமல்ல, என்ன செய்கிறாய் என்பது அவசியமில்லை. ஆனால் அதில் நீ முழுதாய் இருக்கிறாயா என்பது மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டியது நன்றி : ஓசோ - தமிழ் |
||||||||
by Swathi on 20 Nov 2014 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|