|
||||||
கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் ஒரு சிறப்பு பார்வை !! |
||||||
நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் கொத்தமல்லி வாசனை மிகுந்த ஒரு கீரை வகைச்செடியாகும். இதன் இலை, வேர் மற்றும் தண்டு ஆகியவை பல்வேறுவிதமான மருத்துவ குணங்களை கொண்டது. கொத்தமல்லியை coriander leaves என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். இதனுடைய தாவரவியல் பெயர் Coriandrum sativam. கொத்தமல்லியின் விதையை தனியா என்று அழைக்கப்படும் (coriander). இது Apiaceae என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதை நம் வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். இது சுமார் 50cm வரை வளரக்கூடியது.
கொத்தமல்லி கீரை இரத்த உற்பத்திக்கும், இரத்த சுத்திக்கும் மிக சிறந்த இயற்கை மருந்தாகும். கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, பி, பி1 சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது மாலைக்கண் நோய்,சிறுநீரகக் கோளாறு முதலியவற்றை போக்கும் வல்லமை உடையது. கொத்தமல்லியில் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகம் இருப்பதால் மூளையை பலப்படுத்தும். பித்தம் , வாந்தி இரத்த அழுத்த நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும். இதை அதிகம் உண்பதால் மந்தம் தோன்றும் எனவே அளவோடு உண்டு பலன் பெறுவது நல்லது. கொத்தமல்லியின் மருத்துவ குணங்கள் : வயிற்றில் வாயு, வாய்வு தொல்லை மற்றும் ஒட்டுமொத்த செரிமானத்தை பாதுகாத்து நிவாரணம் அளிக்கிறது. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகலில் இருந்து பாதுகாக்கிறது. குமட்டல் உணர்வை குறைக்க உதவுகிறது. சீரகத்தை கொத்தமல்லி சாற்றில் ஊறவைத்து பிறகு அதை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்பு குறையும் மற்றும் இரத்த அழுத்தும் சீராகும்.
கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொட்டியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
மாதவிடாய் தசைப்பிடிப்பு குறைக்க நல்ல மருந்து என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மாதவிடாய் தொடர்புடைய ஹார்மோன் செயல்பாட்டை துரிததப்படூத்துகிறது. கொத்தமல்லியை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு ,எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். இரவில் நன்றாக தூக்கம் வர கொத்தமல்லியை சேர்த்துக்கொண்டால் நல்ல பலனை தரும். உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று தின்றால் உடல் சூடு குறையும் மற்றும் பசியை தூண்டி விடும்.
கொத்தமல்லியில் இரும்பு மற்றும் மக்னீசியம் அதிகம் இருப்பதால் இது இரத்த சோகைக்கு எதிராக போராடும். ஆரோக்கியமான கல்லீரலின் செயல்பாடு மேம்படுத்த உதவுகிறது. இன்சுலின் சுரத்தலை மற்றும் இரத்த சர்க்கரை குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. விழி வெண்படல அழற்சி, கண் ஓரத்தில் ஏற்படும் சுருக்கம், திசு செயலிழப் மற்றும் மன அழுத்தங்களும் நிவரினியாக செயல்படுகிறது. கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வாக காணப்பட்டுள்ளது. எனவே, வயிறு கோளாறுகளை எந்த வடிவத்தில் அனுபவிக்கும் போதும், கொத்தமல்லி இலைகளால் டீ செய்து குடித்தாள் நல்ல தீர்வு கிடைக்கும். 5 கிராம் கொத்தமல்லி விதையை இடித்து அரைலிட்டர் நீரில் விட்டு 100 மி.லியாகக் காய்ச்சி வடிகட்டி பால், சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், செரியாமையால் ஏற்படும் வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும். உடலுக்குத் தேவையான சக்திகளைச் சேமித்து வைத்து தேவைப்படும்போது கொடுக்கும் உறுப்புதான் கல்லீரல். இது வீக்கமோ, சுருக்கமோ அடைந்து பாதிக்கப்பட்டால், உடலானது பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால் கல்லீரலைப் பலப்படுத்த கொத்தமல்லி சிறந்த நிவாரணியாகும். குறிப்பு : கொத்தமல்லியில் எந்த பாதகமான பக்க விளைவுகள் ஏதும் இல்லை என்று பல ஆதாரங்கள் இருப்பினும், இது தாய்மார்களுக்கு கருச்சிதைவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவித்துள்ளது. எனவே கர்பிணிப்பெண்கள் கொத்தமல்லியை தவிர்ப்பது நல்லது. |
||||||
by Swathi on 03 Jun 2014 0 Comments | ||||||
Tags: Coriander Leaves கொத்தமல்லி Kothamalli | ||||||
Disclaimer: |
||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|