அண்ணா அரியணை ஏறினார் தமிழ் அரியணை ஏறியது என்றும் சொல்லலாம். மதராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் வரலாற்று சிறப்பு மிக்க செயல். திருவள்ளுவர் ஆண்டுஅரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீர்திருத்த திருமணம் சட்டமாக்க பட்டது. இப்படி ஒன்றரை ஆண்டுக்குள் அடுக்ககான தமிழுக்கான சட்டங்கள் இயற்றிவிட்டு கடற்கரையில் உறங்கப் போய்விட்டார் எங்கள் அண்ணா, தன் 'இதயம்' இரவலாக களவாடப்பட்டது தெரியமாலே போய் சேர்ந்துவிட்டார். இன்று அவர் நினைவு நாள். தமிழுக்கு அவர் ஆற்றிய பணி போல் அவர் இறப்பும் வரலாற்றில் கின்னஸில் பதியப்பட்டுவிட்டது. இறுதி பயணத்தில் ஒன்றரை கோடி மக்கள் அணிவகுத்தது அவரின் சாதனைகளை பறைசாற்றும். இது வரை உலகில் எந்த ஒரு தலைவனுக்கும் இப்படி ஒரு கூட்டம் கதறியது இல்லை. அணிவகுத்து அஞ்சலி செய்ததும் இல்லை. இன்று அவருக்கு நினைவு நாள். வாழ்க அண்ணா'வின் புகழ். அவருக்கு நம் வீரவணக்கங்கள்...!!!
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்..
|