08.10.1969 தந்தை பெரியார் அறிக்கை
20.10.1969 மன்னார்குடி ராஜகோபால்சாமி கோவில் கருவறை நுழைவுக் கிளர்ச்சி - தந்தை பெரியார் அறிவிப்பு (தஞ்சாவூர் மாவட்ட தி.க கமிட்டி முடிவு)
02.12.1970 தமிழக சட்டமன்றத்தில் எதிர்ப்பின்றி சட்டம் நிறைவேற்றம்
1972 மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பினால் முடக்கம் "ஆப்ரேசன் வெற்றி - நோயாளி செத்தார்" என்று விடுதலை தலையங்கம் (15.3.1972, 16.3.1972)
3.4.1974 தமிழகமெங்கும் அஞ்சலகங்கள் முன் வேண்டுகோள் அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்னை மணியம்மையார் தலைமை தாங்கினார். இடம் : சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகம்.
31.05.1974 மத்திய அமைச்சர் ரகுராமைய்யாவுக்குச் சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.
31.05.1974 மத்திய நிதியமைச்சர் ஒய்பிசவானுக்கு சென்னையில் கருப்புக் கொடி காட்டப்பட்டது.
24.09.1979 ஜஸ்டீஸ் மகாராஜன் தலைமையில் குழு (அரசு ஆணை எண் 1573. நாள் 24.09.1979)
24.08.1982 வேண்டுகோள் அறப்போர் 35 கோவில்களின் முன் நடத்தப்பட்டது.
08.06.1984 ஜஸ்டீஸ் கிருஷ்ணசாமி ரெட்டியார் அறிக்கை (அரசு வெளியீடு எண் : 339. நாள் 08.06.1984)
08.06.1984 கோவில்களில் ஜாதி பாகுபாடின்றி அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவதற்குப் பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கிட நீதிபதி என். கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஒன்று மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர் தலைமையிலான அரசால் அமைக்கப்பட்டது.
1984 தேவையான பரிந்துரைகளை அவர்கள் வழங்கிய நிலையில், பழனி கோவிலில் அதற்கான பயிற்சிப் பள்ளி அமைக்கப்படும் என்று அ.இ.அ.தி.மு.க அரசு சார்பில் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்து அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் சட்டப்பேரவையில் அறிவிப்பு.
09.04.1992 தமிழ்நாடு சட்டப்பேரவையில் 69 சதவிகித அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் - மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு.
23.05.2006 தி.மு.க அரசின் ஆணை.
14.07.2006 தி.மு.க ஆட்சியில் மீண்டும் புதிய கூடுதல் சட்டம் ACT 15/2006 (14.7.2006) உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே ராஜன் குழு பரிந்துரை ஏற்பு ஆணை எண் : 1/2007 ஆணையை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரி சங்கம், கோவில் அர்ச்சகர் பரிபாலான சபை உச்சநீதிமன்றத்தில் வழக்கு இடைக்காலத் தடை - தி.மு.க அரசில் அதன் பின் புதிய ஆணை 23.05.2006. 9 ஆண்டுகளுக்குப் பிறகு 16.12.2015 தீர்ப்பு.
21.12.2015 முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு திராவிடர் கழகத்தின் சார்பில் கடிதம்
18.04.2016 திராவிடர் கழகம் மறியல் போராட்டம் - 5000 பேர் கைது
|