எனது சொந்த விழியினும் மேலாகத் தமிழ் மொழியை மதிக்கிறேன் என்ற உணர்வோடு, இந்த மாநாட்டை நான் வரவேற்கிறேன். அப்படிப்பட்ட இந்த மாநாட் டில் பங்கு கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன்.
பிரஞ்சுப் பண்பாடானது தமிழ் நாட்டில் தனது செல்வாக்கை ஊடுருவிப் பரவ விட்டதாகச் சொல்லமுடியாது என்ற போதிலும், கடந்த நூற்றாண்டுகளில் தமிழர் களுக்கும், தமிழ் நாட்டுக்கும் பிரஞ்சுப் பண்பாடு அறிமுகமானது என்பதை இந்த அனைத்துலக மாநாடு அறிவுறுத்துகிறது. தமிழின் வளர்ச்சியில் பிரான்ஸ் கொண்டுள்ள ஆழ்ந்த நாட்டம், தமிழ்-பிரெஞ்சு அகராதி ஒன்றை வெளியிட்டதன் மூலம் காட்டப்பட்டுள்ளது.
அண்மையில், சின்னாட்களுக்கு முன் வெர்சேல்சுக்குச் சென்றிருந்தேன். அங்கே, பிரான்ஸ்-தமிழக உறவுகளைக் காட்டும் பொருள்களைக் காண விரும்பினேன். இந்தியாவுக்கு டூப்ளே எடுத்துச்செல்ல விரும்பியதும், ஆனால் மாறிவிட்ட சூழ் நிலையால் அவ்வாறு எடுத்துச்செல்ல முடியாமற் போனதுமான ஒரு கடிகாரத்தை எனக்குக் காட்டினார்கள். காலம் மாறிவிட்டது. எனவே அந்தக் கடிகாரம் வெர்சேல்சி லேயே இருக்கிறது. பாரி நகர் நான் சில நாட்களுக்கு முன்னர் பாரிசுக்கு வந்திருந்தபோது, இங்குள்ள இந்திய மாணவர்கள் என்னை ஒரு விருந்துக்கு அழைத்திருந்தனர். அந்த மாணவர்களிலே ஒருவர், பாரிஸ் நகரை ஏதோ பழந்தமிழ்ப் பெருவீரன் பாரியினுடையது என்பதுபோல் “பாரி நகர் ” என்று குறிப்பிட்டார்.
தமிழ் நாட்டிலிருந்து அங்கு வந்துள்ள தூதுக் குழுவில் பதினெட்டுப்பேர் உள்ள னர். ஆனால், அவர்கள் நான்கு கோடித் தமிழர்களின் பிரதிநிதிகள்.
தமிழ் பரவியுள்ளது. தமிழர்கள் உலகெங்கும் சென்றுள்ளார்கள். ஆனால், தமிழ் மொழி - உதாரணமாக மொரீஷியஸ் தீவில் மறைந்துவருகிறது. இன்னும் வேறு சில நாடுகளிலுள்ள தமிழர்களும், தம் தாய் மொழியை மறந்துவிடக்கூடிய அபா யத்திலுள்ளனர்.
இந்த மாதிரியான நிலைமை தொடர்ந்து நிலவ அனுமதிக்கப்படக் கூடாது. தமிழர்கள் வாழ்கின்ற நாடுகளிலெல்லாம், தமிழைக் கற்பதற்கான வாய்ப்பும் தமிழனோடு தொடர்ந்து தொடர்பு வைத்துக்கொள்வதற்கான வாய்ப்பும் வகை செய்யப்பட வேண்டும்.
மொழிப் பிரச்னை மீது கவனம் செலுத்துவது தவறே குற்றமோ ஆகாது என் பதை, அண்மையில் நான் பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சுற்றிப் பார்த்தபோது கண்டேன்.
ஸ்விட்சர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் தாய்மொழிப் பிரச்னை பிற தேசியப் பிரச்னைகள் எதற்கும் குறையாத இடத்தைப் பெற்றுள்ளன. வரலாற்று சகாப்த காலம் தொட்டு ஆழ்ந்த புலமை பெற்ற மொழியாகும் தமிழ். அது ஒரு செழுமிய மொழி. பாரதி போன்ற கவிஞர்கள் அதன் மகிமையைப் பாடி யிருக்கிறார்கள். ஆனால், அந்த முதுமையும் தற்போதைய வளர்ச்சியும் மட்டுமே போதாது. நாம் வெறுமனே பழைய மகிமையில் ஓய்ந்திருக்கக் கூடாது. சிந்தனைகளை உணர்த்தவும் விஞ்ஞான வளமிக்க - விண்வெளிப் பயணம் நடத்து கிற நவீன காலத்தின் செய்திகளைத் தெரிவிப்பதற்கும் ஏற்ற கருவியாய் வாகன மாய்த் தமிழ் மாறவேண்டும் என்பதனை நாம் உணரவேண்டும். தொழில் நுணுக்கம் அறிவியல், மருத்துவம் முதலியவற்றைக் கற்பிப்பதற்கு ஏற்ற பயிற்று மொழியாய் இது வந்தாக வேண்டும். தமிழ் வளர்வதற்காக, தமிழ் நாட்டுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே மாண வர்களைப் பரிமாறிக்கொள்வது அத்தியாவசியமாகும். இதனால், மொழிகளின் தொடர் பால் தமிழ் செழுமைப்படுத்தப்படலாம். ஆங்கில-தமிழ் நவீன அகராதி ஒன்றை அபிவிருத்தி செய்தலும் அத்தியாவசிய மாகும். இந்த அகராதி திறமையானதாய் அமைய மூன்று லட்சம் சொற்களுக்குப் பதில் குறைந்த பட்சம் ஆறு லட்சம் சொற்களேனும் இடம் பெற வேண்டும். அப் போதுதான் தமிழ் உண்மையான ஒரு நவீன மொழியாகமுடியும். இங்கே, நீங்கள் தமிழ் நாட்டுத் தூதுக்குழுவினரைப் பார்க்கிறீர்கள். அவர்கள், மருத்துவ மனைக்குத் தன் குழந்தையை எடுத்து வந்திருக்கிற ஆசையான பெருமித மான தாயைப் போன்றவர்கள். அநுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களையும் அறுவைச் சிகிச்சை நிபுணர்களை யும் போன்றவர்கள் இங்கே கூடியுள்ள தமிழறிஞர்கள். அவர்கள், குழந்தைக்கு (தமிழுக்கு) முழு ஆரோக்கியத்தையும் தர முயல்கிறார்கள். இப்படிப்பட்ட கடுமையான அறுவைச் சிகிச்சைகளுக்கெல்லாம் குழந்தை இரையாக லாமா ? என்று எண்ணி, அந்தச் சிகிச்சையைத் தடுக்கக்கூடாது தாய். அது, தாய்மை அன்பைக் காட்டுவதாகாது. அதேபோல், அறுவைச் சிகிச்சைக்காரர்களும் கண்டபடி தம் கத்தியை ஓட்டக் கூடாது. தமிழ் வல்லுநர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ச்சி செய்துவிட்டு அத்தோடு தம் பணி முடிந்ததென்று எண்ணிவிடக் கூடாது. மூன்று பணிகள்
இந்த மாநாடு மூன்று பணிகள் மீது கவனம் செலுத்த வேண்டும். 1.முதலாவதாக, தமிழ்நாட்டுக்கும் பிற நாடுகளுக்குமிடையே மாணவர்கள் பரி வர்த்தனைக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
2.இரண்டாவதாக, தமிழை ஒரு நவீன மொழியாக்கும் வண்ணம் ஆங்கிலம்-தமிழ் அகராதியைத் தயாரிக்கும் பணியிலிறங்க வேண்டும்.
3.மூன்றாவதாக, உலகின் பல்வேறு நாடுகளிலும் தமிழைப் பரப்பவும் வளர்க்கவும் வேண்டும். இந்தப் பணிகளில் மறைந்த அண்ணாவின் அடியொற்றி நடக்கும் எமது தமிழ் நாட்டு அரசு இயன்ற எல்லா உதவிகளையும் செய்யும்.
|