|
|||||
உலக சிக்கன தினம் - அக்டோபர் 30 !! |
|||||
அவசியத்தையும், சேமிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் நாளாக ஆண்டுதோறும் அக்டோபர் 30ஆம் தேதி உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகிறது.
சிக்கன தினத்தின் வரலாறு :
கடந்த 1924 ஆம் ஆண்டு சர்வதேச சேமிப்பு வங்கிகளின் சிக்கன மாநாடு இத்தாலியில் மிலான் நகரில் நடைபெற்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் சேமிப்பு வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் உலக சிக்கன தினம் என ஒரு தினம் கொண்டாப்பட வேண்டும் எனவும், இத்தினத்தில் சேமிப்பு, சிக்கனம் போன்றவைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
இத்தினம் பொருளாதார வளர்ச்சியை எய்துவதற்காக சிக்கனத்தினதும், சேமிப்பினதும் முக்கியத்துவத்தைக் குறிக்கின்றது.
ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமித்தல் மிகவும் அவசியமாகும்.
"சிறுக கட்டி பெருக வாழ்" என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட சிறு வயது முதலே அனைவருக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் வேண்டும். சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதால் அந்தத் தொகைக்கு உத்தரவாதமும், சிறுக சிறுக சேமிக்கும் தொகை பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படுகிறது.
வரவு எட்டணா... செலவு பத்தணா வாக இருந்தால், வாழ்க்கையில் சந்தோஷம் வராமல் போகும். ஆயிரங்களிலும், லட்சங்களிலும் சம்பளம் வாங்குவோர் மட்டுமல்ல... அன்றாடம் கூலி வேலை செய்பவர்களுக்கும், சேமிப்பு அவசியம். வரவு அறிந்து செலவு உணர்ந்து செயல்பட்டால், சந்தோஷம் நம் வசமாகும்.
சேமிப்பின் அவசியத்தை உணரும் நாம் இன்றிலிருந்தே அதற்கான பணிகளை தொடங்குவோம் !!
எதிர்காலத்தை பற்றி சிந்திப்போம் !! இன்றிலிருந்தே சேமிப்பை ஆரம்பிப்போம் !! |
|||||
by Swathi on 29 Oct 2013 0 Comments | |||||
Tags: சிக்கனம் சிக்கன தினம் Savings Savings Day | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|