எரிமலை வெடிப்பு காரணமாக சாம் ரதுலங்கி சர்வதேச விமான நிலையம் உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள ருயாங் தீவில் உள்ள எரிமலை ஒன்று கடந்த மாதம் கரும்புகையைக் கக்கியபடி வெடித்துச் சிதறத் தொடங்கியது. பின்னர் அமைதியான நிலையில் கடந்த சில நாட்களாக அந்த எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறத் தொடங்கி உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தத் தீவில் உள்ள எரிமலை அடிவாரக் குடியிருப்புகளில் வசித்து வந்த 12 ஆயிரம் பொதுமக்கள் மீட்கப்பட்டனர்.
எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில் அதன் தாக்கம் அதிகமாக இருப்பதையடுத்து அங்குள்ள கல்வி நிறுவனங்களான பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதனையடுத்து சுற்றுலாப் பயணிகளின் வருகையைத் தவிர்க்கும் வகையில் சர்வதேச விமான நிலையமான சாம் ரதுலங்கி உள்பட 7 விமான நிலையங்கள் மூடப்பட்டன.
|