புனேயில் இருபதாவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 43 நாடுகளை சேர்ந்த 577 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். நேற்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் விகாஸ் கவுடா தங்கம் வென்றார். மேலும் பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் பூவம்மா வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் ரதிராம் சைனி வெண்கலம் வென்றார். விகாஸ் கவுடா இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்ததோடு மட்டுமல்லாமல் ஆசிய சாம்பியன்ஷிப் வரலாற்றில், தனது மூன்றாவது பதக்கத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
|