திருவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு, திருப்பதி பெருமாளின் பட்டு வஸ்திரம் அணிவிக்கப் பட்டது.
திருப்பதி பிரமோற்சவ விழாவின் போது, திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலை கொண்டு செல்லப்பட்டு பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக ஆண்டாளுக்கு திருப்பதியிலிருந்து 2 பெரிய அளவிலான வெண்குடைகள், பெருமாள் அணிந்த பட்டு வஸ்திரமும் கொண்டு வரப்பட்டது.
இதை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதற்காக ஆண்டாள், ரெங்கமன்னாரை ஊஞ்சலில் அமரவைத்து, பெருமாள் அணிந்த பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.
|