|
||||||||
தொல்காப்பிய இலக்கணக் கடலில் முத்துக்கள் எடுத்த தமிழகத்தின் மொழியியல் பேராசிரியர்கள் சிலரின் நூல்களின் படங்கள் ... |
||||||||
தொல்காப்பியத்தை மொழியியல் நோக்கில் ஆராய்ந்து , தொல்காப்பியத்தின் சிறப்புக்களை உலக அளவில் கொண்டுசென்றுள்ள மொழியியல் பேராசிரியர்களின் நூல்களின் படங்களைக் கீழே அளித்துள்ளேன்.
பேராசிரியர்கள் தெ.பொ.மீ. வி.ஐ. சுப்பிரமணியம், ச. அகத்தியலிங்கம், முத்துச்சண்முகம், குமாரசாமி ராஜா, இ. அண்ணாமலை, இசுரேல், சி. சுப்பிரமணியன், நீதிவாணன், விசயவேணுகோபால், இரா. தாமோதரன், கி. கருணாகரன், பா. ரா. சுப்பிரமணியன், அ. காமாட்சிநாதன், க. முருகையன், கே.எஸ். கமலேஸ்வரன், பொற்கோ, இரங்கன், ஞானசுந்தரம், ..... இன்னும் பட்டியல் நீளும். அவர்களது நூல்களின் படிகள் தற்போது என்னிடம் இல்லை. இவர்கள் அனைவரும் தமிழ்ப் புலவர், வித்துவான், பி.ஓ.எல். எம் ஏ போன்ற தமிழ்ப்படிப்புக்களை மேற்கொண்டுவிட்டு, பின்னர் மொழியியல் துறையில் இணைந்து ஆய்வு மேற்கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பழந்தமிழ் இலக்கணங்கள், இலக்கியங்களில் சிறப்பான பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.
அடுத்து, மேற்கூறிய முதுபெரும் பேராசிரியர்களின் மாணவர்களாகிய சி. சண்முகம், செம்மொழி க. இராமசாமி, ந. நடராசபிள்ளை, ல. இராமமூர்த்தி, ஆதித்தன், கி. உமாதேவி, மு. அபிராமி உட்பட பலர் தொல்காப்பியத்தைப்பற்றிய பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
1970-இல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் துறையில் மொழியியலாளர்கள், தமிழ் இலக்கண அறிஞர்கள் பலர் பங்கேற்ற ''தொல்காப்பிய மொழியியல்'' கருத்தரங்கின் நூல் வடிவம் என்னிடம் இல்லை. நண்பர்களிடம் இருந்தால் எனக்குப் படி எடுத்து அனுப்பவும். அதற்கான செலவுத்தொகையை நான் அனுப்பிவைக்கிறேன்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல்துறைப் பேராசிரியர் க. பாலசுப்பிரமணியன் அவர்கள் தொல்காப்பியரின் நூற்பாக்களின் சொல்லிலக்கணம் பற்றி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் எனது மாணவிகள் முனைவர் கி. உமாதேவி, திருமதி மு. அபிராமி இருவரும் தமிழ் இணையக் கல்விக் கழகத்திற்கு ஒரு மென்பொருள் (தொல்காப்பியத் தரவகம்)உருவாக்கி அளித்துள்ளார்கள். அதன் படத்தையும் இங்கு இணைத்துள்ளேன். இந்த மென்பொருளை மேலும் தொடர்ந்து செம்மைப்படுத்தப் பணி மேற்கொண்டுவருகிறார்கள். இந்த மென்பொருளைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் செம்மைப்படுத்தக் கருத்துரைகளை அனுப்பலாம். நன்னூலுக்கும் திருக்குறளுக்கும் இதுபோன்ற முயற்சியை எங்கள் ஆய்வுக் குழுவினர் மேற்கொண்டுவருகிறார்கள்.
இந்தப் பதிவின் நோக்கம்... பழந்தமிழ் இலக்கணங்களின் சிறப்பைத் தற்கால மொழியியல் துறை அறிவின் அடிப்படையில் வெளிப்படுத்தும் ஏராளமான ஆய்வுகள் தமிழகத்தில் ஏராளமாக நடைபெற்றுள்ளன என்பதை நண்பர்களுக்குத் தெரிவிப்பதற்கேயாகும். மொழியியலின் வேறு பல பிரிவுகளிலும் மொழியியல் பேராசிரியர்கள் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறபோதிலும், பழந்தமிழ் இலக்கணங்களின் சிறப்பை உலகளாவிய அளவில் கொண்டுசெல்லத் தொடர்ந்து முயல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
|
||||||||
by Swathi on 20 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|