|
|||||
திருமலை பிரம்மோற்சவம் தீர்த்தவாரியுடன் நிறைவு! |
|||||
திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம், தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது.
பூலோக வைகுண்டமாகக் கருதப்படும் திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி, சிறப்பாக நடந்து வந்தது.
இந்த உற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. அதற்காக ஸ்ரீதேவி, பூதேவி மலையப்ப சுவாமியின் உற்சவ மூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் ஏழுமலையான் கோயிலில் இருந்து திருக்குளக்கரைக்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளினர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள
மண்டபத்தில் திருமஞ்சனம் நடந்தபின் சக்கரத்தாழ்வார் உற்சவரை அர்ச்சகர்கள் எடுத்துக் கொண்டு திருக்குளத்திற்கு சென்று தீர்த்தவாரி நடத்தினர். பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதற்கு அடையாளமாக கொடிமரத்தில் இருந்து கருடக் கொடியை அர்ச்சகர்கள் இறக்கினர்.
ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
திருமலையில் நடைபெற்று வந்த வருடாந்திர பிரம்மோற்சவம், தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இந்த உற்சவம் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. அதற்காக ஸ்ரீதேவி, பூதேவி மலையப்ப சுவாமியின் உற்சவ மூர்த்திகள் மற்றும் சக்கரத்தாழ்வார் ஏழுமலையான் கோயிலில் இருந்து திருக்குளக்கரைக்கு தங்கப் பல்லக்கில் எழுந்தருளினர்.அங்கு அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோயிலில் அடுத்த மாதம் (அக்டோபர்) 10ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
|
|||||
by Mani Bharathi on 22 Sep 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|