LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

திருக்குறள் பிரசாரம் செய்யும் கோயம்புத்தூர் நித்தியானந்த பாரதி

"மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் திருக்குறள் தீர்வு சொல்கிறது. மருத்துவர், விவசாயி, ஆசிரியர் என எந்தத் துறையை சேர்ந்தவரும் திருக்குறளை படித்துணர்ந்து தன்னை அதன் பொருளோடு இணைத்து தெளிவுபெறலாம்.

இப்படிப்பட்ட அரிய நூலான திருக்குறளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது சவாலான பணியாக இருந்தாலும், அதனை வாழ்நாள் முழுவதும் செய்துகொண்டே இருப்பேன்" என்கிறார் நித்தியானந்த பாரதி.

கோயம்புத்தூரில் வசித்துவரும் நித்தியானந்தபாரதி, பினாயில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். சிறுவயதில் இருந்தே தமிழ் மொழி மீது பற்றுகொண்ட இவர், திருக்குறளையும் திருவள்ளுவரையும் இளம் தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் பணியை கடந்த 17 ஆண்டுகளாக செய்து வருகிறார்.மாதத்தில் 15 நாட்கள் வேலைக்காகவும், 15 நாட்கள் திருக்குறளுக்காகவும் தான் ஒதுக்குவதாக இவர் கூறுகிறார்.

கணபதி தமிழ்ச் சங்கம் எனும் சங்கத்தை தொடங்கி, மொழி ஆர்வலர்கள் பலரை ஒருங்கிணைத்து வாரந்தோறும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளை இலவசமாக நடத்தி வருகிறார் இவர். '2002 முதல் தொடர்ந்து 700 வாரமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருக்குறள் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறேன். பள்ளி மாணவர்கள், கல்லூரி இளைஞர்கள், பெரியவர்கள், எனது குடும்ப உறுப்பினர்கள் என அனைவரும் இந்த வகுப்புகளில் ஆர்வமாக கலந்துகொள்கின்றனர். வாழ்வாதாரத்திற்காக எத்தனையோ வேலைகள் செய்தாலும், நான் செய்யும் திருக்குறள் பணி ஆத்ம திருப்தியை எனக்களிக்கிறது' என்கிறார்.

இவரின் வீடு முழுவதும் ஒரு அடி முதல் ஐந்து அடி வரையிலான திருவள்ளுவர் சிலைகள் நிரம்பியுள்ளன. திருக்குறள் பிரசாரத்தின் முக்கிய பணியாக திருவள்ளுவர் சிலைகளை உருவாக்கி பள்ளி, கல்லூரி, வீடு, அலுவலகம் போன்ற இடங்களில் நிறுவும் பணிகளையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.

'ஒரு விஷயத்தை நேரில் காணும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல் திருக்குறளை மக்களிடம் எடுத்துச்செல்ல திருவள்ளுவரின் சிலைகள் உதவும் என கருதினேன். ஆதலால், கடந்த 2009 ஆம் ஆண்டில் சொந்த செலவில் 3,000 திருவள்ளுவர் சிலைகளை தயாரித்து இலவசமாக வழங்கினேன். இதற்குபின்னர், திருவள்ளுவர் சிலைகளை பல உயரங்களில் உருவாக்கி தருமாறு கல்வி நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் கேட்டுக்கொண்டனர். பின்னர், திருவள்ளுவர் சிலை தயாரிப்பதற்கு முக்கியத்துவம் அளித்தேன். இப்போது, வெளிநாடுகளில் இருந்து பல ஆர்டர்கள் வந்துள்ளன. திருமண விழாக்களில் இந்த திருவள்ளுவர் சிலைகள் அன்பளிப்பாக கொடுக்கப்படுகின்றன. சிரமங்கள் பல இருந்தாலும், உற்பத்தி விலையில் மட்டுமே சிலையை விற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்' என கூறுகிறார்.

 

by Swathi   on 02 Nov 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து தமிழ்நாட்டின் திருக்குறள் ஆர்வலர்கள் பலரை சந்தித்து
அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல்  பரிசளிக்கப்பட்டது. அமெரிக்காவின் சென்றுள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திரு. Dr. T. R. B.ராஜாவிற்கு திருக்குறள் ஆங்கில நூல் பரிசளிக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள் ஐக்கிய நாடுகள் சபை நூலகத்திற்கு வழங்கப்பட்ட இரண்டு திருக்குறள் நூல்கள்
அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது. அமீரகத்தில் (UAE) நடைபெற்ற திருக்குறள் திருவிழா இரண்டாமாண்டு நிகழ்வில் “Thirukkural Translations in World Languages ” என்ற ஆங்கில ஆய்வு அடங்கல் நூல் வெளியிடப்பட்டது.
திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார். திரைப்படமாகும் திருக்குறள் – A.J.பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.