|
||||||||||||||||||
தப்பி வந்த முதலை |
||||||||||||||||||
ஒரு அடர்ந்த வன காட்டுக்குள் மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்தது. அந்த ஏரிக்கு அனைத்து விலங்குகளும் வந்து தண்ணீர் அருந்தி விட்டு செல்லும். நல்ல அகலமான ஏரியாகவும், சுற்றி வர காட்டுப்பகுதியாகவும் இருப்பதால் எல்லா பக்கங்களிலும் இருந்து விலங்குகள் வந்து நீர் அருந்தும். அதே போல் ஏரி கரைகளில் பெரிய பெரிய மரங்கள் இருந்த்தால் குரங்கு கூட்டங்களும் அந்த மரங்களில் வசித்து வந்தன. அந்த குரங்குகள் எல்லாம் அங்கு நீர் அருந்த வரும் விலங்குகளுடன் விளையாடி மகிழ்ச்சியாய் இருந்தன.
எங்கிருந்தோ ஒரு முத்லை ஒன்று அந்த குளத்துக்கு வந்து சேர்ந்தது. ஆரம்பத்தில் விலங்குகள் முதலை வந்ததை கண்டு கொள்ளவில்லை. ஆனால் போகப்போக, முதலையின் குறும்புகள் அதிகமாகி விட்டன. விலங்குகளுக்கு மிகப்பெரிய் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டது. அது மட்டுமல்ல அங்கு நீர் அருந்த வரும் விலங்குகளை அடித்து உணவாகவும் சாப்பிட ஆரம்பித்து விட்டது.
விலங்குகள் அனைத்தும் ஒன்று கூடி பேசின. இருந்தாலும் முதலை அருகில் போய் பேச பயந்திருந்தன. காரணம் தண்ணீருக்குள் முதலைக்கு யானையை விட பலம் அதிகமாக இருந்தது. சிங்கம், புலி கூட தரையில் முதலையை சமாளித்து விட முடியும், ஆனால் தண்ணீருக்குள் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தன.
இப்பொழுதெல்லாம் விலங்குகள் பயந்து பயந்துதான் ஏரிக்கு வந்து தண்ணீர் அருந்துகின்றன. ஒரு காலத்தில் எந்த பயமுமில்லாமல் நடு ஏரி வரை நீந்தி சென்று தண்ணீரில் விளையாடி மகிழ்ந்த விலங்குகள் இப்பொழுது தண்ணீர் குடிக்க கரையோரத்துக்கு வரவே அஞ்சின. இப்படியாக எல்லாம் பய்ந்து கொண்டிருந்த வேளையில் குரங்கு குட்டி ஒன்று மரத்திலிருந்து கீழிறங்கி அந்த ஏரியின் ஓரம் விளையாடி கொண்டிருந்தது. சத்தமில்லாமல் தண்ணீரில் நீந்தி வந்த முதலை “க்ப்பென்று”குரங்கு குட்டியை கவ்விக்கொண்டு தண்ணீருக்குள் சென்று விட்டது.
பாவம் குரங்கு குட்டியின் தாய் கரையோரம் வந்து கதறியது, எல்லா மிருங்கங்களும் வேடிக்கை பார்க்கத்தான் முடிந்ததே தவிர அதனை காப்பாற்ற முடியவில்லை.
குட்டியை இழந்த குரங்கு அழுது கொண்டே சென்றது. அப்பொழுது, காட்டை விட்டு மக்கள் வசிக்கும் கிராமத்தின் பக்கம் சென்று வாழ்ந்து கொண்டிருந்த நரி ஒன்று தன்னுடைய காட்டை பார்க்க வந்து கொண்டிருந்தது. குரங்கு அழுது கொண்டிருப்பதை பார்த்து என்ன விடயம் என்று விசாரித்தது குரங்கு தன்னுடைய குட்டியை முதலை கவ்விக்கொண்டு போனதை அழுது கொண்டே சொன்னது.
நரிக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வந்தது, இந்த காட்டை தாண்டி அங்குள்ள கிராமத்தில் சர்க்கஸ் விழா ஒன்று நடந்து கொண்டிருந்தது. இரவு சர்க்கஸ் பார்க்க அங்குள்ள மக்கள் கூடி விடுவார்கள். நரியும் ஒரு ஓரமாய் புதரில் ஒளிந்து கொண்டு அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த குதிரை, சிங்கம், புலி, யானை .மற்றும் குட்டி குட்டி விலங்குகளை பார்க்கும். அப்பொழுது முதலை ஒன்று காணாமல் போய் விட்டதாய் பேசிக்கொண்டிருந்தது ஞாபகம் வந்தது.
உடனே குரங்கை அழைத்துக்கொண்டு அந்த சர்க்கஸ் நடக்கும் கிராமத்துக்கு சென்றது, இரவு நேரம் ! அங்கு கட்டப்பட்டிருந்த குதிரையிடம் சென்று முதலை காட்டுக்குள் இருப்பதாகவும், அது அங்குள்ள எல்லா மிருகங்களையும் பயமுறுத்திக்கொண்டிருப்பதாக தெரிவித்தது. குதிரை அங்கிருந்த மற்ற விலங்குகளுடன் கலந்தாலோசித்தது. நாளை காலை யானை சர்க்கஸ் கூடாரத்தை விட்டு தப்பிச்செல்வதாகவும், அதற்கு முன்புறம் குரங்கு அந்த காட்டுக்கு வழி காட்டிக்கொண்டு சென்றால், யானை நேராக அந்த ஏரிக்கே சென்று முதலையை வெளியே கொண்டு வர ஏதேனும் செய்து கொள்வோம் என்று முடிவு செய்தன.
மறு நாள் காலையில் அங்கிருந்து யானை சர்க்கஸ் கூடாரத்தை விட்டு தப்பித்து ஓடியது, அங்கிருந்த ஊழியர்கள் அதனை பிடிக்க ஜீப்பில் விரட்டி வந்தனர். யானை குரங்கு வழி காட்ட அந்த அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து அந்த ஏரியை நோக்கி சென்றது. அதற்குள் அதனை விரட்டி வந்த ஊழியர்கள் யானை ஏரியின் கரை ஓரம் அசையாமல் நிற்பதை பார்த்தவுடன் அதனை பிடிக்க அருகில் வந்தனர்.
அதற்குள் குரங்கின் ஏற்பாட்டின்படி மரத்தின் மேலிருந்து குரங்குள் மரக்கிளைக்ளை பிடித்து உலுக்க மரத்திலிருந்த காய்கள், பழங்கள் இவைகள் சட சடவென தண்ணீருக்குள் விழுந்தன. இந்த சல்சலப்பு சத்தம் கேட்டு வெளியே எட்டி பார்த்த முதலையின் கண்ணில் படும்படி குரங்கு ஒன்று ஆனால் யானையின் பக்கத்தில் நின்று கொண்டது. சத்தமில்லாமல் அந்த குரங்கை கவ்விப்பிடிக்க நீந்தி வந்த முதலை சட்டென குரங்கை பிடிக்க பாய்ந்து வெளியே வர, எதிர்பார்த்து காத்திருந்த குரங்கு சட்டென தள்ளி ஓட முதலையும் இன்னும் கொஞ்சம் தலையை நீட்டி முயற்சித்தது. இப்பொழுது முதலையின் முக்கால் உடம்பு வெளியே தெரிய தயாராய் இருந்த யானை தனது தும்பிக்கையால் அதனை சுற்றி வளைத்து தூக்கி வெளியே வீசியது.
யானையை பிடிக்க மெதுவாய் வந்த ஊழியர்கள் “தொம்மென்று அருகில் வந்து விழுந்த முதலையை பார்த்த்தும் இது சர்க்கஸிலிருந்து தப்பித்த முதலைதான் என்பதை கண்டு கொண்டு முதலில் முதலையை பிடித்து விட்டு யானையை பிடிக்கலாம் முடிவு செய்தவர்கள் முதலையை பெருமுயற்சி செய்து வாயை காட்டி வண்டிக்குள் தூக்கி போட்டு கொண்டு சென்றார்கள்.
யானை அவர்களை பின் தொடர்ந்து வர ஆரம்பித்தது. ஊழியர்களுக்கு ஆச்சர்யம், ஆஹா இந்த முதலையை நமக்கு காட்டத்தான் இங்கு வந்திருக்கிறது என்று முடிவு செய்து யானையை பாராட்டினர். அவர்களுக்கு தெரியுமா? இந்த குரங்குக்கு உதவி செய்யத்தான் இங்கு வந்த்து என்பதை ? மீண்டும் அனைத்து விலங்குகளும் அந்த ஏரியில் குதித்து விளையாடி , தண்ணீரை குடித்தும் மகிழ்கின்றன. இதற்கெல்லாம் காரணம் குட்டியை இழந்த குரங்கும், அந்த நரியும், யானையும்தான் காரணம்.
குட்டீஸ் விலங்குகள் ஆபத்து காலத்தில் ஒன்றுக்கொன்று எப்படி உதவி செய்கிறது பார்த்தீர்களா? |
||||||||||||||||||
Escape Crocodile | ||||||||||||||||||
by Dhamotharan.S on 17 Jul 2019 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|