பி.சி.சி.ஐ தலைவராக ஸ்ரீனிவாசன் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு வந்த பிறகே ஸ்ரீனிவாசன் தலைவராக பொறுப்பேற்க முடியும்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இந்நிலையில் தலைவர் பதவிக்கு ஸ்ரீனிவாசனை தவிர வேறு யாரும் வேட்புமனு செய்யாததால், ஸ்ரீனிவாசன் மீண்டும் பி.சி.சி.ஐ தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தபிறகே ஸ்ரீனிவாசன் தலைவராக பொறுப்பேற்க முடியும். கடந்த மே மாதம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னை அணியை சேர்ந்த, ஸ்ரீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து தலைவர் பொறுப்பிலிருந்து ஸ்ரீனிவாசன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
|