சாம்பியன்ஸ் கோப்பையின் முக்கியமான லீக் ஆட்டத்தில் நேற்று வெஸ்ட் இண்டீஸ் , தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. கனமழை காரணமாக போட்டி தாமதமாகத் தொடங்கியது. தலா 31 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என நடுவர்கள் அறிவித்தனர். டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா அணி 31 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 230 ரன் எடுத்திருந்தது. அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 26.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் டக்வோர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டம் டிராவில் முடிந்ததாக நடுவர்கள் அறிவித்தனர். இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் தென் ஆப்ரிக்கா அணி அரை இறுதிக்கு முன்னேறியது.
|