|
|||||
சமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி |
|||||
கடந்த 10 நாள்களாக ஒரு ஆராய்ச்சி... 1. பிள்ளைகளை, குடும்பத்தை, உறவினர்களை, நம் வேலைகளை எல்லாம் கவனிக்கத் தவறுகிறோம். 2. சுற்றுப்புறச் சூழலைச் சுத்தம் செய்யத் தவறுகிறோம். 3. நேரத்துக்கு சாப்பிட தூங்க தவறி விடுகிறோம். 4. நிறைய நண்பர்களை கருத்து வேறுபாட்டால் இழக்கிறோம். 5. குழந்தைகள் ஏதாவது கேட்கும் போது எரிந்து விழுகிறோம். 6. ஆக்கப்பூர்வமான தகவல்கள் இருந்தும் அதைப் பின் பற்றத் தவறுகிறோம். 7. வாழ்க்கையில் சாதிக்கத் தவறுகிறோம். உழைக்கத் தவறுகிறோம். அப்படி சமூக வலைதளத்தில் சிக்கிக் கொண்டு என்னத்த சாதிக்கிறோம் ஒன்றுமில்லை.பெற்றவர்களை கவனிப்பதில்லை.யார் யாருக்காவோ சண்டை போடுகிறோம்.இதுவெல்லாம் தேவையா? இத்தனையும் தவிர்த்தால் எத்த...........த....னை சாதிக்கலாம்.10 நாளுக்கு முன் 10 வயது சிறுவனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.அவன் அம்மா எதுக்கோ திட்டினாங்க.பயமா இருக்கான்னு கேட்டேன்.இதுக்கெல்லாம் பயமில்லே.அவங்க கைல செல்போன் எடுத்துடுவாங்களோன்னு பயப்படறேன்.பளார்னு அறைந்தது போலிருந்தது. இனி நானும் சமூக வலைதளங்களில் இருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொ்ள ஆரம்பித்தேன்.சாதனைகள் கூடுகிறது.முகம்,மனம் தெளிவாயிருக்கு.வீடு சுத்தமாயிருக்கு.நீங்களும் அப்படியிருக்கணும்னு ஆசைப்படறேன் ஒரு சகோதரியாக...வேலைவெட்டி இல்லேன்னு கவலைப் படாதீங்க.சின்னதா சுயதொழில் ஆரம்பித்து முதலாளியாகப் பாருங்க.வெற்றி கிடைக்கும்...
-திருமதி.அனிதா குப்புசாமி Facebook Post |
|||||
by Swathi on 08 Jun 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|