|
||||||||
இந்த குட்டி பாப்பாக்களை பாருங்கள் |
||||||||
கண் விழித்து எழுந்ததும்,
பாந்தமாய் குளித்து வந்ததும்,
காலை உணவை உண்ட பின்,
பள்ளி செல்ல கிளம்புவர்.
கட்டு கட்டாய் புத்தகம்,
பெரிய பெரிய பையிலே,
முதுகில் போட்டு செல்லுவர்.
சுத்தமான உடையிலே,
கண்ணை பறிக்கும் சீருடை,
கருமை நிறம் பளிச்சிடும்,
காலணியை போட்டுத்தான்,
மழலை குரலில் பேசியே,
மகிழ்வாய் பள்ளி செல்வோரே.
பள்ளி முடிந்து வந்த பின்,
முகத்தில் களைப்பு தெரிந்தாலும்,
புன் சிரிப்பு மாறாது,
புத்தக பையை வைக்குமுன்,
அம்மாவை தேடி தேடியே,
கண்கள் மட்டும் அலையுதே,
அம்மா கொடுப்பாள் பாலையே.
அருந்தி விட்டு ஓடுவர்
நண்பர்களை பார்க்கவும்
ஒன்றாய் ஓடி ஆடவும்.
ஆறு மணி ஆனதும்,
அம்மா அழைப்பாள் அவர்களை,
திரும்பி வீடு வந்ததும்
கை கால்களை கழுவியே
படிக்க அமர்வர் பாந்தமாய்.
இரவு மணி எட்டுக்குள்
அப்பா வருவார் வீட்டுக்குள்
படிப்பு முடிந்த இவர்களும்
அப்பாவுடன் அரட்டை அடிப்பரே !
குடும்ப மக்கள் அனைவரும்
ஒன்றாய் உட்கார்ந்து உண்பரே
உறங்க போகு முன்னரே
அவரவர் கடவுளை வணங்கியே
ஆழ்ந்த நித்திரை செய்வரே. |
||||||||
See this childrens | ||||||||
by Dhamotharan.S on 29 Nov 2016 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|