|
||||||||
தமிழ்ப் பேராசிரியர் -தமிழினப் போராளி - பகுத்தறிவுச் சிந்தனையாளர் -ஆய்வாளர்-முனைவர் க. நெடுஞ்செழியன் |
||||||||
தமிழ்ப் பேராசிரியர் , தமிழினப் போராளி , பகுத்தறிவுச் சிந்தனையாளர்,ஆய்வாளர் முனைவர் க. நெடுஞ்செழியன் க. நெடுஞ்செழியன் (K. Nedunchezhiyan, 15 சூன் 1944 – 4 நவம்பர் 2022) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர், மெய்யியலாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர். விரிவான ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டுத் தமிழ், திராவிட இயக்கச் சிந்தனைகளையொட்டி “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” உள்ளிட்ட 25 நூல்களை எழுதினார். இவற்றுள் ஆசீவகமும், அய்யனார் வரலாறும் என்ற ஆய்வு நூல் கூடுதல் பதிப்புகளைக் கண்டுள்ளது. இவர் ஆய்வுகள் மொழியியல் ஆய்வாளர்கள் நடுவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.[4] தமிழரின் பழங்கால சமயமும், ஏறக்குறைய தமிழர்களால் மறக்கடிக்கப்பட்டதுமான ஆசீவகம் குறித்து ஆராய்ந்து எழுதி அந்நெறி குறித்த கருத்துகளை மீண்டும் பொதுவெளியில் கொண்டுவந்தார். மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோருக்குப் பிறகு தமிழ்ச் சமூகத்தின் மிக முக்கியமான ஆய்வாளராக, அறிஞராக நெடுஞ்செழியன் பார்க்கப்படுகிறார். தொடக்க வாழ்க்கை நெடுஞ்செழியனின் தாயார் மீனாட்சி, 20 மார்ச் 2018 அன்று திருச்சியில் காலமானார். கல்வி மெய்க்கீர்த்திகள் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். 1977-ஆம் ஆண்டு முனைவர் பட்ட ஆய்வை மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டிருந்தபோது தன் நெறியாளரான பேராசிரியர் முருகரத்தினம் என்பாரின் ஊக்கத்தால் வங்காளத்தைச் சேர்ந்த மார்க்சிய அறிஞர் தேவிபிரசாத் சட்டோபாத்தியாயாவின் Lokayata: A Study in Ancient Indian Materialism என்ற நூலை வாசித்தார். அந்நூலைத் துணைச்சான்றாகக் கொண்டு தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம் என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். ஆசிரியப்பணி கல்லூரி, பல்கலைக்கழகப் பணியின்போதும் சொந்த ஊருக்குச் சென்று வேளாண்மை செய்வதைத் தன்னுடைய இணைப் பணியாக மேற்கொண்டார். ஆய்வுகள் தொடர்ந்து ஆசீவகம் குறித்து உரைகளை நிகழ்த்தினார். தமிழ்நாட்டின் இளம் ஆய்வாளர்கள் பலரையும் திருச்சிக்கு வரவழைத்துத் திருப்பட்டூர், சித்தன்னவாசல் போன்ற இடகளுக்கு நேரில் அழைத்துச் சென்று, களப்பயணமாக அவற்றைக் கற்றுத் தந்தார். திருப்பட்டூரிலுள்ள அரங்கேற்ற அய்யனார் கோயில், பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சித்தன்னவாசல் குடைவரைக் கோயில் ஆகிய இடங்களில் 17 செப்டம்பர் 2017 அன்று நடைபெற்ற வரலாற்று ஆய்வியல் அறிஞர்களின் கள ஆய்வுக்குத் தலைமை தாங்கினார் நெடுஞ்செழியன். அப்போது அவர் "அறிவார்ந்த சமூகமாக வாழ்ந்த தமிழர்களின் வரலாறு மீட்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்கான ஒரு முயற்சியே இந்தக் கள ஆய்வு. தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 'கீழடி'கள் உள்ள நிலையில், அதில் முதன்மையானதாக திருப்பட்டூர் விளங்குகிறது. இங்கு அகழாய்வு உள்ளிட்ட பல ஆய்வுகள் நடத்தினால், தமிழர்களின் அறிவார்ந்த பல விடயங்கள் வெளியுலகுக்குத் தெரியவரும்" என்றார்.
குடும்ப வாழ்க்கை அரசியல் ஈடுபாடு தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த அனைத்துத் தமிழ் இயக்கங்களோடும் இணைந்து பணியாற்றினார்[3] அவர் எழுதிய பல கவிதைகள் விடுதலைப்புலிகளின் இதழான ‘எரிமலை’யில் வெளியாகின. வழக்குகளும் சிறையிருப்பும் 1994-95 காலகட்டத்தில் நாள்தோறும் மாலை நேரங்களில் இளைஞர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களிடையே திராவிட இயக்கப் பார்வையில் இலக்கியம் குறித்துப் பேசுவதையும் பயிற்சி வகுப்புகள் எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார் நெடுஞ்செழியன். திருச்சியில் அப்படி நடந்த ஒரு கூட்டத்தில் பிரிவினைக்கு ஆதரவாகப் பேசினார் எனக் குற்றம் சாட்டி அவரை பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (தடா) கீழ் கைது செய்தது தமிழ்நாட்டுக் காவல்துறை. அவருடன் திராவிடர் கழகத்தின் அன்றைய சேலம் மண்டல அமைப்புச் செயலாளரும் பின்னாளைய திராவிடர் விடுதலை கழகத் தலைவருமான கொளத்தூர் மணியும் சிறையில் இருந்தார். நெடுஞ்செழியன் அதன்பின் பிணை ஆணை பெற்று வெளிவந்தார்.
|
||||||||
by Swathi on 19 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|