|
||||||||
சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி |
||||||||
பிறப்பு:இராசகோபாலாச்சாரி அவர்கள் 10 திசம்பர், 1878ம் ஆண்டு தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார்.சுருக்கமாக
இராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். இராசாசியின் கல்லூரிக் கல்வி பெங்களூரு சென்ட்ரல்
கல்லூரியிலும் சென்னை மாகாணக் கல்லூரியிலும் கழிந்தது.வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என
பன்முகம் கொண்டவர். முதல் கவர்னர் செனரல்: சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் செனரலாக
பொறுப்பாற்றினார்.பிற்காலத்தில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத்
துவங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை
பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம்
வரையில் நட்பு பாராட்டியவர்.அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு
ஆட்பட்டார். காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின்
பெர்மிட்-கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி
1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான
அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை
நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.பாரத ரத்னா
விருது:1954ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு
வழங்கப்பட்டது.இலக்கியம்:இராசாசி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார்.
தமிழிலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். நினைவுச்
சின்னங்கள்:தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராசகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் தருமபுரி மாவட்டம்
தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட
இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும்.இறப்பு:25 திசம்பர் 1972ம் வருடம் சென்னையில்
இயற்கை எய்தினார்.
பிறப்பு:
இராசகோபாலாச்சாரி அவர்கள் 10 திசம்பர், 1878ம் ஆண்டு தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தார்.சுருக்கமாக
முதல் கவர்னர் செனரல்:
சுதந்திரத்திற்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் செனரலாக பொறுப்பாற்றினார்.பிற்காலத்தில் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சுதந்திராக் கட்சியினைத் துவங்கினார். இக்கட்சியுடன் கூட்டணி அமைத்து 1967இல் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதும் பெரியார் ஈ. வே. இராமசாமியுடன் தமது கடைசிக் காலம் வரையில் நட்பு பாராட்டியவர்.அப்போது அவர் கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமர்சனத்திற்கு ஆட்பட்டார்.
காங்கிரசின் சோசலிச நோக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகி அரசின் பெர்மிட் கோட்டா ஆட்சிக்கு மாறான தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை நிறுவி 1962,1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.அவருடன் கூட்டணி கண்ட சி. என். அண்ணாதுரை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
பாரத ரத்னா விருது:
1954ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு
இலக்கியம்:
இராசாசி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் இராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார்.
நினைவுச் சின்னங்கள்:
தமிழ்நாடு அரசு சக்ரவர்த்தி ராசகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் தருமபுரி மாவட்டம்
இறப்பு:
25 திசம்பர் 1972ம் வருடம் சென்னையில் இயற்கை எய்தினார். |
||||||||
by Swathi on 20 Aug 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|