LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

பன்னாட்டு கணித்தமிழ் 24’ மாநாடு,

தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சார்பில் கணித்தமிழ் பன்னாட்டு மாநாட்டின் ஒருபகுதியாக நிரலாக்க (ஹேக்கத்தான்) போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்விக்கழக இயக்குநர் சே.ரா.காந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த ‘தமிழிணையம் 99’ மாநாட்டுக்குப் பின் 25 ஆண்டுகள் கழித்து தமிழக அரசு ஒருங்கிணைக்கும் ‘பன்னாட்டு கணித்தமிழ் 24’ மாநாடு, அடுத்தாண்டு பிப்ரவரி 8, 9, 10-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

நிரலாக்கப் போட்டியை (ஹேக்கத்தான்) 

 

உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு இணையவழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகிய முக்கியமான பணிகளைச் செய்துவரும் தமிழ் இணைய கல்விக்கழகம் இந்த மாபெரும் மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. இம்மாநாட்டின் ஒரு பகுதியாக தமிழ் இணைய கல்விக்கழகம், ஸ்டார்ட்அப் டிஎன் நிறுவனத்துடன் இணைந்து நிரலாக்கப் போட்டியை (ஹேக்கத்தான்) நடத்துகிறது.

 

 

இப்போட்டியின் வாயிலாக நவீனத் தொழில்நுட்பங்களான இயற்கை மொழி ஆய்வு, இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இதர டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியின் வளமையை வெளிக்கொணரவும், புதுமைகளைச் சிந்திக்கத் தூண்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

 

20-க்கும் மேற்பட்ட தலைப்புகள் 

 

தமிழ் எழுத்துணரி (தமிழ் ஓசிஆர்), தமிழ் பேச்சைப் புரிந்து கொள்ளுதல், தமிழ் உள்ளடக்க உருவாக்கம், தமிழ் உரையாடி, தமிழில் இயற்கை மொழி ஆய்வு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நிரலாக்கப் போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும், ஆர்வலர்களும், மொழி தொழில்நுட்பம் சார்ந்து செயல்படும் நிறுவனங்களும் கலந்துகொள்ளலாம். மேலும், நிரலாக்கப் போட்டியிலிருந்து உருவாகியிருக்கும் கருவிகள், மென்பொருள்கள், தளங்கள், தொழில்நுட்பங்கள் போன்றவை ஆய்வாளர்கள் மற்றும் பொதுப் பயன்பாட்டுக்காக www.tamilvu.org இணையதளத்தில் பதிவேற்றப்படும். நிரலாக்கப் போட்டி குறித்த விரிவான விவரங்கள் https://www.kanitamil.in/#/hackathon என்ற இணைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

by Kumar   on 23 Nov 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.