ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான அரை இறுதி போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின, இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங் செய்தது, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் டிராவிட் 43 ரன்களை எடுத்தார். அடுத்து விளையாடிய மும்பை அணி 19.5 ஓவரிலேயே 6 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன், மும்பை இந்தியன்ஸ் அணி மோத உள்ளது.
|