|
|||||
மாயக் கலையும், மந்திர வித்தையும் : 03 - மந்திர வித்தை என்பது என்ன? |
|||||
மறைந்த மந்திர கலை வித்தகர் என்னுடைய தமையனார் திரு. இளங்கோ அவர்களிடத்திலும் என்னிடத்திலும் கேட்கும் கேள்விகள் - மந்திர வித்தை என்பது எப்படி செய்கின்றீர்கள்? நாங்களும் செய்ய முடியுமா? என்பதுதான். மந்திர வித்தை என்பது என்ன? நாம் கண்ணினால் காட்சிகளை பார்கின்றோம். பார்த்த காட்சி கண் நரம்புகள் மூலமாக மனித மூளைக்கு எடுத்து செல்லபடுகின்றது. மனித மூளை அந்த காட்சிகளை பார்த்து, காட்சியை விவரித்து மனதில் பதிய வைக்கின்றது. அப்படி எடுத்துச் செல்லும் காட்சிகளை, நடுவில் மந்திர வித்தை என்ற மெல்லிய திரை கொண்டு, மந்திர வித்தை கலைஞர் தடுத்து, காட்சியை தனக்கு வேண்டிய மாதிரி மாற்றி காண்போர் மனதில் பதிய விடுகிறார். இதுதான் மந்திர வித்தை. உதாரணம் இதோ தங்கள் கண்முன்னால்: நேர் கோடா அல்லது வளைந்த கோடா? நடு புள்ளியை நன்றாக உற்று பார்த்தால் இரு வளையங்க்களும் வெவ்வேறு திசையில் சுற்றுகின்ற மாதிரி தெரியும். இரண்டு கோடுகளும் ஓன்றா? இந்த இரு கோடுகளில் எது பெரியது? குத்தி நிற்கும் கோடுதானே? மேற்கூரிய உதாரணங்கள் உங்கள் கண்களை எமாற்றியதல்லவா? இப்பொழுது ஒரு இல்லூஷன் (ILLUSION) மந்திர காட்சி. யானையை ஒரு வெற்றிடதில் வரவழைக்கும் வித்தையை காண்போம்.
இப்பொழுது நாம் சில மந்திர வித்தைகளை எப்படி செய்வது என்று பார்ப்போம். முதலில் வீட்டில் சாதாரணமாக கிடைக்கும் பொருட்களை கொண்டு இரண்டு வித்தைகள். அடுத்தாக கிலாசிக் (CLASSIC) வகையை சார்ந்த ஒரு வித்தை. இவைகளை காணொளி காட்சியின் மூலமாக பார்போம். Part-1:
Part-2:
வணக்கம், அடுத்த இதழில் சந்திப்போம். |
|||||
by Swathi on 14 Jul 2018 4 Comments | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|