|
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் |
||||||||
மக்களைக் காக்கும் சித்த மருத்துவம் - மரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அறிமுகம்: ஒரு உயிருக்கு ஏற்படுகின்ற வேதனையை தன் நோய் போல எண்ணி நோய் நீக்குபவனே உண்மையான மருத்துவன் ஆவான். அந்த வகையில் சித்த மருத்துவத்திற்கே தன்னை அர்ப்பணித்தவர் டாக்டர். ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆவார். பாரம்பரிய மற்றும் பட்டதாரி சித்த மருத்துவர்களுக்குப் பாலமாக விளங்கக் கூடியவர். இன்று சித்த மருத்துவம் மக்கள் இயக்கமாக மாற இவரும் ஒரு காரணமாவார். உலக மருத்துவமாகும் சித்த மருத்துவம்: நவீன மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளையும் தெரிந்து கொண்டால் தான் சித்த மருத்துவத்தின் பெருமையை உலகறியச் செய்ய முடியும் என்று கூறுகிறார். பி.எஸ்.எம்.எஸ். உலோக மருத்துவம் உலக மருத்துவமாக விரிவடையும். உலக சுகாதார அமைப்பு நவீன மருத்துவத்திற்காக மட்டுமே அமைக்கப்பட்டது கிடையாது. எல்லா மருத்துவத்தையும் அணைக்கக் கூடிய அமைப்பாக அது செயல்பட வேண்டும். பாராட்டும் உள்ளம்: சித்த மருத்துவம் வளர பலர் பாடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் யாரும் வெளியில் அதிகமாகத் தெரியவில்லை. இது சித்த மருத்துவ வளர்ச்சிக்கு ஒரு தடையாகும். சித்த மருத்துவத்தில் ஒருவருக்கொருவர் பாராட்டும் உள்ளம் பெற வேண்டும். ‘இதை இவர்தான் அறிமுகப்படுத்தினார்’ என்று தயங்காமல் கூற வேண்டும். பாராட்டத்தக்கவர்களைப் பாராட்டும் உள்ளம் வேண்டும். தான் மட்டும் வளர வேண்டும் என்று நினைக்கக் கூடாது. மனித சமுதாயத்தின் மிகப்பெரிய இடர்: உணவு முறை கட்டுப்பாடு என்பது மட்டும் ‘பத்தியம்’ அல்ல. வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதும் பத்தியம் தான். சித்த மருத்துவர்களுக்கு ஜோதிட அடிப்படை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் எனத் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள் கூறுகிறார். இன்று மனித சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய இடர் ‘கொரோனா’ ஆகும். இதை நீக்கச் சித்த மருத்துவர்கள் பங்களிக்க வேண்டும். கைவிடப்பட்ட நிலையிலும் சித்த மருத்துவம் காப்பாற்றும் என்ற நம்பிக்கை மக்களிடையே வர வேண்டும். மக்களின் அச்சத்தை போக்குவது தான் மருத்துவர்களின் தலையாய கடமை ஆகும். நோய் கட்டுப்பாட்டுக் குழுவில் சித்த மருத்துவர்கள் இடம்பெற வேண்டும். இன்னும் சித்த மருத்துவம் குறித்த விரிவான ஆராய்ச்சி தேவை. நவீன மருத்துவத்தால் கொரோனா நோயானது குணப்படுத்தப்பட்டாலும் பல பக்கவிளைவுகள் நவீன மருத்துவத்தால் ஏற்படுகின்றன. ஆனால் சித்த மருத்துவத்தால் பக்க விளைவுகள் இல்லாமலே நோயானது குணப்படுத்தப்படுகின்றது. மக்கள் சிறிது சிறிதாகச் சித்த மருத்துவத்தை நம்பத் தொடங்கியுள்ளனர். எனவே இனிவரும் காலமானது சித்த மருத்துவ காலமாக மாறும் என்றும் திரு. ஜெயப்பிரகாஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். |
||||||||
by Lakshmi G on 30 Oct 2020 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|