|
||||||||
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்- எம். பாலசஞ்சீவி - அணிந்துரை |
||||||||
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!
“தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!” என்ற இந்த நாடகம் நம் கண்ணீரால் காத்த சுதந்திர வரலாற்றின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியைத் தன்னகத்தே கொண்டது. சிவகங்கைச் சீமையை வெள்ளையர்களின் பிடியிலிருந்து காப்பாற்றுவதற்காக அரும்பாடுபட்டு அம்முயற்சியில் வீரமரணம் எய்திய மருது சகோதரர்களின் வீரத்தை வெளிப்படுத்துவது. சின்ன மருதுவை நாடகத் தலைவனாக்கி இந்த நாடகத்தை உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். நம் நாட்டு விடுதலைப் போருக்கு முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்களில் முக்கியமானவர்கள் மருது சகோதரர்கள். தமிழ் மக்கள் பெருமை கொள்ளத்தக்க வீரமறவர்கள் அவர்கள். அவர்களது வரலாற்றைச் சுவையும் பயனும் மிக்க வகையில் நாடகமாக்கியிருப்பது இவ்வாசிரியரின் தனிச் சிறப்பு. நடிப்பதற்கும் படிப்பதற்கும் ஏற்ற வகையில் இதை உருவாக்கியிருக்கிறார். அன்பர் திரு. பாலசஞ்சீவிக்கு நாடகத் துறையில் இது முதல் முயற்சி. இந்த முதல் முயற்சியே அதன் உட்பொரு ளாலும் அமைப்பு முறையாலும் அவரிடமுள்ள ஆற்றலை வெளிப்படுத்துவதாக உள்ளது. மென்மேலும் அவர் எழுத்துத் துறையில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். தமிழ்ப் பெருமக்கள் இந்நூலுக்கு அளிக்கும் வரவேற்பு அவரது ஊக்கத்தையும் ஆக்கத்தையும் வளர்க்கத் துணைபுரியுமாக. அன்புள்ள,
கன்னித்தமிழ் நாடகக் கருவூலமான "மனோன் மணீயம்" படித்துச் சுவைத்தற்கே உரியது மேடையில் நடித்துச் சிறப்பித்தல் எளிதன்று. செகப்பிரியர் நாடகங்கள் போன்று நடிக்கவும் படிக்கவும் எனப் படைத்துத் தானே முக்கிய பாத்திர மேற்று நடித்துச் சிறப்பித்துள்ளார் நாடக ஆசிரியர் பாலசஞ்சீவி.
இராம இலக்குவன் போன்று இணைபிரியாது வாழ்ந்து ‘மருது பாண்டியர்’ என இருவருமே மன்னர்களாக இருந்தனர். விசுவாமித்திரன் வேள்வியை “மண்ணினைக் காக் கின்ற மன்னன் மைந்தர்கள்; கண்ணினைக் காக்கின்ற இமையின் காத்தனர்.". அதுபோல் வேலுநாச்சியின் விடு தலைவேள்வியைக் காத்தவர் மருது பாண்டியர். “அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர் அன்ன வர்க்கே சரண் நாங்களே” என காளையார் கோயில் காக்கச் சரண் அடைந்தவர். அவர்களின் வீரமரணத்தால் “கன்று பிரிந்துழிக்கறவை ஒப்பக் கரைந்து" கலங்கியிருப்பாள் தமிழ்த்தாய்.
________________________________________________________________________ விடுதலைப் போரில் தமிழகம் கொண்ட பங்கைத் தமிழ்மக்கள் அனைவரும்-சிறப்பாக-தமிழ் மாணவர்கள் அனைவரும் நன்றாக-அறிந்து கொள்ளுதலே நலம் பயப்ப தாகும். அவ்வகையில் அவ்வீரப் பெருமக்களின் வரலாற்றை ஆசிரியர் திரு எம். பாலஞ்சீவி அவர்கள் நாடகமாக ஆக்கி யிருப்பது பெரிதும் வரவேற்றுப் போற்றத் தக்கதாகும். தமிழ்நாட்டு மாணவர்கள் எளிதாகவும் இனிதாகவும் இந் நாடகத்தைத் தங்கள் தங்கள் பள்ளிகளில் நடித்துப் பயன் பெறலாம். தமிழ்நாட்டு நாடக மன்றங்களும் வானொலி நிலையமும் தொலைக்காட்சி நிலையமும் இந்நாடகத்தை நடிக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
|
||||||||
by Swathi on 20 Feb 2019 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|