ஒரு மனிதன் தனக்காக மட்டும் உழைத்தால் , அவன் ஒரு
புகழ்பெற்ற விஞ்ஞானியாகவோ , மாபெரும் ஞானியாகவோ ,
தலைசிறந்த கவிஞனாகவோ ஆகக்கூடும் ….. ஆனால்
அவனால் என்றுமே உண்மையில் நிறைவான ,
மகத்தான மனிதனாக ஆக முடியாது .
உலகத் தலைவர்களின் வரிசையில் முன்னிலையில் இருப்பவர் கார்ல் மார்க்ஸ் (Karl Marx ) ஆவார் . இவர் 1818 ஆம் ஆண்டு மே 5 அன்று ஜெர்மனியில் பிறந்தார் . அறிவியல் சார்ந்த பொதுவுடமைக் கொள்கையை வகுத்தார் , அரசியல் பொருளாதார வரலாற்றில் வல்லுநர் , தலைசிறந்த அறிஞர் , எழுத்தாளர் , சிந்தனையாளர் மற்றும் புரட்சியாளராக உலகம் முழுவதும் அறியப்படுகிறார் . இவருடைய தத்துவங்கள் சிந்தனைகளும் மார்க்ஸிசம் என்று அழைக்கப்படுகிறது . இக்கொள்கை உலகம் முழுவதும் தொழிலாளி வர்க்கத்தினரால் பின்பற்றப்படுகிறது . இவரும் , ஏங்கெல்சும் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை 1948 ஆம் ஆண்டு லண்டனில் வெளியிட்டனர் .
கார்ல் மார்க்ஸ் 1867 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று மூலதனம் என்ற நூலை வெளியிட்டார் . இந்த புத்தகம் வெளிவந்த முதல்நாளே உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப்பெற்றது . உலகின் தலைசிறந்த நூலாக மூலதனம் கருதப்படுகிறது . மூலதனம் என்ற நூலின் மூலம் உலகத்திற்கே பொருளாதாரப் பாதையை மார்க்ஸ் ஏற்படுத்திக் கொடுத்தார் . உழைப்பு , உழைப்புக்கு ஏற்ற ஊதியம் , ஊதியம் உழைத்தவனைச் சென்று சேர வேண்டும் என்று மூலதனம் என்னும் புத்தகத்தில் மார்க்ஸ் எழுதியிருந்தார் . இது தொழிலாளர்களின் வாழ்வில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியது . மார்க்ஸ் என்னும் மாமனிதர் 1883 ஆம் ஆண்டு மார்ச் 14 இல் இயற்கை எய்தினர் .
|