ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் உள்ளிட்ட 18 பேருக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும், நிழல் உலக தாதாக்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை காவல் துறை சமர்ப்பிக்கவில்லை என நீதிபதி தெரிவித்தார். விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால், ஆவணங்களை வரும் 18ஆம் தேதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இயலாது என காவல் துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜாமின் கிடைத்த அனைவரும் தங்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
|