இந்தியாவில், சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, ஒரு இருபது ஓவர் போட்டி மற்றும் 7 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. நான்கு ஒரு நாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் ஐந்தாவது ஒருநாள் போட்டி, நாளை கட்டாக்கில் நடைபெற இருந்தது. கட்டாக்கில் இடைவிடாமல் மழை பெய்துவருவதால், நாளை நடைபெற இருக்கும் இந்திய, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒரு நாள் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களுக்கு டிக்கெட்களுக்கான பணம் திருப்பி தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|